Page 6 of 6
சாலைக்கு வந்து சேர்ந்தான். அங்கே அவன் விட்டுச் சென்ற டப்பாக் கார் பரிதாபமாக நின்று கொண்டிருந்தது. உலகின்மீதே தனக்கு ஏற்பட்ட வெறுப்பையெல்லாம் ஒன்று திரட்டி அதன் மீது காட்டுகிறாற்போல 'பானெட்' மீது ஒரு குத்து விட்டான். அதில் ஒரு சொட்டை விழுந்தது. வலித்த கையைத் தடவி விட்டுக் கொண்டவன் என்ன நினைத்தானோ, ஏறி அமர்ந்து, 'ஸ்டார்ட்' செய்தான். அது 'மக்கர்' பண்ணாமல் உடனே உறுமிக்கொண்டு புறப்பட்டது!
'நல்ல சகுனம்தான்' என்று எண்ணிக் கொண்டான் கல்யாணம்.
----------------
தொடரும்...