(Reading time: 6 - 12 minutes)
Muthu Sippi
Muthu Sippi

Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 04 - சரோஜா ராமமூர்த்தி

2.5. குரங்கு மூஞ்சி பாலு....!

  

ருநாள் பிற்பகல் மூன்று மணிக்கு டாக்டர் ஸ்ரீதரனும், ராதாவும் நாகராஜனின் வீட்டிற்கு வந்தார்கள், தெருப் பக்கத்து அறையில் மேஜைமீது கட்டுக் காகிதங்களை வைத்துக் கொண்டு நாகராஜன் உட்கார்ந்திருந் தான் . கூடத்து சோபாவில் சாய்ந்து கொண்டு கோமதி புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். பவானி உள்ளே வேலையாக இருந்தாள். வீடு நிசப்தமாக 'வெறிச்' சென்று கிடந்தது.

  

டாக்டரும், ராதாவும் வருவதைக் கவனித்த கோமதி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். வாயிற்படி அரு கில் வந்து நின்று சிரித்துக் கொண்டே “வா ராதா! என்னவோ நீங்கள் எல்லாம் டிராமா போடுகிறீர்களாமே? சுமதி சொன்னாள். அவள் தான் அதில் கிருஷ்ணனாம். நீ மீராவாக வருகிறாயாம், எனக்கு இலவசமாக டிக்கெட் உண்டோ இல்லையோ?" என்று கேட்டாள்.

  

கையிலிருந்த அழகுப் பையைச் சுழட்டிக் கொடே ராதா புன்முறுவலுடன் உள்ளே வந்தாள். இதற்குள் அறையைவிட்டு உவளியே வந்த நாகராஜனைப் பார்த்து வணக்கம் செலுத்திவிட்டுச் சோபாவில் அமர்ந்தாள் ராதா.

  

என்ன டாக்டர்! இப்படி விச்ராந்தியாக உங்களைப் பார்ப்பதே அபூர்வமாயிற்றே! சௌக்கியம் தானே?" என்று கேட்டான் நாகராஜன்.

  

சௌக்கியந்தான் மிஸ்டர் நாகராஜன். பள்ளிக்கூட டிராமாவுக்கு டிக்கட்டுகள் விற்க வேண்டுமாம். என்னையும் கூட வரும்படி, நச்சரித்து விட்டாள் ராதா. இனிமேல் உங்கள் பாடு அவள் பாடு. நீங்கள் பணம் கொடுத்தே டிக்கட்டுகள் வாங்குவீர்களோ, அல்லது படங்கள் மனைவி கூறிய மாதிரி அவளே இலவசமாக டிக்கட்டுகள் கொடுப்பாளோ எனக்குத் தெரியாது" என்று கூறிவிட்டு ஸ்ரீதரன் தமக்கே உரித்தான முறையில் கட கட வென்று சிரித்தார்.

  

யாரோ நண்பர்கள் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து பவானி தட்டுக்களில் பழங்களும், காப்பியும் கொண்டு வந்து கூடத்தில் இருந்த மேஜை மீது வைத்தாள். பிறகு டாக்டரைப் பார்த்துப் புன்முறுவலுடன் வணக்கம் செலுத்திவிட்டு, அருகிலிருந்த சோபாவில் உட்கார்ந்தாள்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.