(Reading time: 6 - 12 minutes)
Muthu Sippi
Muthu Sippi

Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 06 - சரோஜா ராமமூர்த்தி

2.6. பழிக்குப் பழி

  

சுமதியை விட பாலு மூன்று வயசு மூத்தவன் . பெண் குழந்தையாகிய சுமதியின் உள்ளத்தில் நிறைந்திருந்த கருணையும், மென்மையும் அவனிடத்தில் அவ்வளவாக இல்லை. இந்தப் பெண் இத்தனூண்டு இருந்து கொண்டு என் நோட்டிலே ’குரங்கு மூஞ்சி' என்று எழுதிப் படம் வேறு போட்டாளே! இவளை எப்படியாவது பழிவாங்கியே தீரவேண்டும்' என்றெல்லாம் கழுவிக் கொண்டேயிருந்தான். சுமதியும் ஜெயஸ்ரீயும் ஒரே வகுப்பில் இருக்கிறவர்கள், ஜெயரீயின் நோட்டுப் புத்தகங்களை இவள் வாங்கி வருவாள். ஏதாவது ’நோட்ஸ்' எழுதிக் கொண்டு திருப்பித் தந்து விடுவாள். பாலு சமயம் பார்த்துக் கொண்டிருந்தான் பழிவாங்க.

  

அடுத்த நாள் பள்ளிக்கூடம் விட்டதும் சுமதியுடன் ஜெயஸ்ரீ இவர்கள் வீட்டுக்கு வந்தாள். இருவரும் வேடிக்கையாகச் சிரித்துப் பேசிக் கொண்டே அத்தை பவானி கொடுத்த சிற்றுண்டியைச் சாப்பிட்டார்கள்.

  

பவானி பெண்கள் இருவருக்கும் தலைவாரிப் பின்னிப் பூச்சூட்டினாள். குதூகலத்துடன் சிரித்துக் கொண்டே..... அவர்கள் வெளியே போனார்கள்,

  

பாலு அவர்கள் வெளியே போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மெள்ளப் பதுங்கிப் பதுங்கி வெளியே ஹாலுக்கு வந்தான். மேஜை மீது கிடந்த சுமதியின் பள்ளிப் பையைத் திறந்து ஜெயஸ்ரீயின் நோட்டுப் புத்தகம் ஒன்றை எடுத்தான். அழகாக முத்துக்கள் கோத்தது போல் எழுதியிருந்த அவள் பாடங்களில் நான்கைந்து தாள்களைக் கிழித்துப் போட்டான்.

  

" உம்” என்று ஒரு முறை தொண்டையைக் கனைத்தான். போர்க் களத்திலே பழிக்குப் பழி வாங்கிய வெற்றி வீரபாது சிரிப்பு ஒன்று அவன் தொண்டைக்குள் ளிருந்து வெளிப்பட்டது. பிறகு சுமதியின் நோட்டுப் புத்தகம் ஒன்றில் 'சுமதீ! ’ஸயன்ஸ்' நோட்ஸ் எப்படி எழுதிக் கொள்வாய் பார்க்கலாம்?--பாலு" என்று எழுதி வைத்தான்.

  

அன்றிரவு அவன் சாப்பிட்டுவிட்டுச் சீக்கிரமே தூங்கி விட்டான்.

  

அடுத்த நாள் காலை பாலுவும் சுமதியும் ஒன்றாகவே காப்பி சாப்பிட்டார்கள். சுமதி

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.