Page 4 of 4
முன்னைப் போல கார் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கவில்லை. வீட்டுக்குச் சற்றுத் தொலை விலேயே நின்றது ராதா இறங்கினாள். பிறகு . 'டாடா' ’பை பை' என்று கைக் குட்டையை ஆட்டிக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தாள்.
இதைக் ' காம்பவுண்ட்' சுவர் ஓரமாக மறைந்திருந்து கவனித்த சுவாமிநாதன், ராதா உள்ளே சென்றதும் பின்னால் சென்றார்.
”எங்கேயம்மா போய்விட்டு வருகிறாய்?" என்று கேட்டார்.
”கொலுவுக்கு. வருகிற வழியிலேயே சுண்டலை எல்லாம் தின்று விட்டேன்!" என்று பச்சையாகப் புளுகினாள் ராதா.
காதலின் வேகம் அப்படிப் பட்டது போலும்!
--------------
தொடரும்...