Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 26 - சரோஜா ராமமூர்த்தி
2.26. அவசர முடிவு
சுவாமிநாதனின் உடல் நிலையில் மாறுதல் எதுவும் அதிகமாக ஏற்பட வில்லை. நாடி நடந்தால் ஆயாசமும் கிறுகிறுப்பும் அவருக்கு ஏற்பட்டது. வீட்டில் சமையலைக் கவனித்துக் கொள்ள வேறொருவர் வந்திருந்தார்.
மனைவியிடம் கோபித்துக் கொண்டு போன மூர்த்தியிடமிருந்து மூன்று நான்கு மாதங்கள் வரையில் தகவலே தெரியாமல் இருந்தது. முதலில் சில நாட்கள் வரையில் ராதா அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. "அவர் தான் முதலில் கடிதம் எழுதட்டுமே. தவறு அவர் பேரில்தானே இருக்கிறது?' என்று வீராப்புடன் மௌனம் சாதித்து வந்தாள். பால்யத்திலிருந்து கூடப் பிறந்த தமையனிடம் கூட மனம் விட்டுப் பழகாமல் போகவே தன் மனசில் இருக்கும் குறைகளை யாரிடம் வெளி யிடுவது என்பது புரியாமல் அவள் திகைத்து. தன் துயரத்தைத் தானே விழுங்கிக் கொள்ள நேர்ந்தது.
அவள் வேளா வேளைக்குச் சாப்பிடாமல் எதிலும் பற்றில்லாமல் இருப்பதை சுவாமிநாதன் தான் கவனித்தார். வாழைக் குருத்துப் போல் மழமழவென்று வாளிப் பாக வளர்ந்திருந்த அந்தப் பெண் நிறம் மாறி இளைத்துப் போய் இருப்பது அவர் மனத்தைப் பிழிந் தெடுத்தது. ராதா குழந்தையாக வளர்ந்து பெரியவள் ஆனது. வீட்டில் சர்வ சுதந்திரத்துடன் அவள் இருந்தது ஸ்ரீதரன் தன் சகோதரியிடம் வைத்திருக்கும் அலாதி அன்பு. இவை யாவும் அவர் சிந்தனையைத் தூண்டி விட்டன.
கூடத்தில் ஒரு பெஞ்சியில் படுத்துக்கொண்டே சுவாமி நாதன் சிந்தனையில் மூழ்கி இருந்தார். மாடியில் ராதாவும் யோசனையில் மூழ்கி, தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாவற்றையுமே மறந்திருந்தாள்.
கல்யாணம் ஆவதற்கு முன்பு அந்த வீட்டில் அவளுக்கு இருந்த சுதந்திரம், உரிமை யாவும் இப்பொழுது பறிபோய் விட்ட மாதிரி ஒருவித உணர்ச்சி அவளைப் பிடித்து வாட்டியது. அந்த வீட்டிலே வெட்டியாக உட்கார்ந்து தண்டச் சாப்பாடு சாப்பிடு-வதாகவே ராதா நினனத்தாள். மற்றப் பெண்களைப் போல அவள் மனதிலும் பல ஆசைகள் தளிர் விட்டன. கணவன் சம்பாதித்து வருவதை வைத்துக் கொண்டு அழகாக செட்டாக, இன்பமாகக் குடித்தனம் நடத்த