இருந்தபோது வெயில் படாமல் இருந்தவர், இப்போது காட்டிலும் மேட்டிலும் வெயிலில் திரிவதால் இப்படி நிறம் மாறியிருக்க வேண்டும் என்று எண்ணினேன். "எங்கே வந்தீர்கள்? யாரையாவது கல்லூரியில் சேர்த்திருக்கிறீர்களா?" என்றேன்.
"உங்களிடம்தான் வந்தேன்."
"என்ன? சொல்லுங்கள்."
"சந்திரனைப்பற்றி-"
"ஒன்றும் தெரியவில்லையே."
"முயற்சி எல்லாம் கைவிட்டு விட்டார்களா?"
"அவ்வளவுதான். நானும் அவனுடைய ஊர்க்குப் போய் பல நாள் ஆயின."
"பெற்றோர் எப்படி இருக்கிறார்கள்?"
"கவலைபட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் நான் பார்க்கவில்லை."
"மறந்துவிட்டீர்கள்; கல்லூரி உறவு அவ்வளவுதான்."
"மறக்கவில்லை."
"அந்தக் குடும்பத்தில் எத்தனை பிள்ளைகள்"
"அவன் ஒருவன். பெண் ஒருத்தி"
"சரி" என்று மேல்துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு என்னைப் பார்த்தார்.
அவருக்கு ஏதோ தெரியும் போல் இருக்கிறது என்று உணர்ந்தேன். "நீங்கள் எங்காவது