(Reading time: 10 - 20 minutes)
Vata malli
Vata malli

Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 09 - சு. சமுத்திரம்

வாடா மல்லி, அத்தியாயம் - 9

  

வாழ்ந்து கெட்டவர்கள் என்பதுபோல், அவர்கள் ‘கெட்டு வாழ்கிறவர்கள்’ என்ற புதுமொழியாய் சொல்லும் படியாய் இருந்தது அந்த வீடு.

  

சமையலறை மட்டும் பாடாவதிச் சுவரோடு நிற்க, அதற்கு எதிர்த் திசையில் புதிய கான்கிரீட் சுவர்களாலான வீடு. சுற்றிலும் அடைக்கப்பட்ட பனை ஓலை காம்பவுண்ட் அகற்றப்பட்டுக் கருங்கல் சுவர் கம்பீரமாய் நின்றது. மும்மூன்று அறைகளைக் கொண்ட இரண்டு பத்திக் கட்டிடம். அந்த இரண்டும் நீண்ட வராண்டாவில் அல்லது திண்ணையில் முகங்களைக் காட்டிக் கொண்டிருந்தன.

  

சுயம்புவை, யாரோ உள்ளே கொண்டு வந்து விட்டு விட்டு, வந்த சுவடு தெரியாமல் போய்விட்டார்கள். அவன் மூன்றடி உயரத்திற்கு மேலுள்ள தார்சாவில் பெஞ்சுமேல் உட்கார்ந்திருப்பவர்களைப் பார்த்தான். ஒருவர் பிறக்கும் போதே முடி முளைக்காத மொட்டை. அறுபது வயதிருக்கும். அவரருகே ஒரு கம்பீரமான ‘ப’ வடிவ மீசைக்கார இளைஞன். அவன் பக்கத்தில் மஞ்சள் முகத்தோடு கூடிய ஒருத்தி, வயிறு துருத்த சுவரில் சாய்ந்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். எதிர்ப்புற நாற்காலியில் அதே வயது இளைஞன். ஆனாலும் மீசை தெரியாத கருப்பு.

  

சுயம்பு, முற்றத்தில் நிறுத்தப்பட்ட மோட்டார் பைக்கின் முன்பக்க முகப்பில் ஒரு கராத்தேக்காரனின் உருவப்படத்தை ரசித்துப் பார்த்தான். ஆம்புளன்னா இப்படித்தான் இருக்கணும். இல்லாட்டா அந்த டேவிட் மாதிரி இருக்கணும். அதோ இருக்கானே, கரிமூஞ்சி.

  

சுயம்பு, கராத்தே உருவத்தைக் கண்ணிலிருந்தும், டேவிட் உருவத்தை மனத்திலிருந்தும் விடுவித்துக் கொண்டே, தன்னை ஆச்சரியமாகப் பார்ப்பவர்களை அகலக் கண் போட்டுக் கேட்டான்.

  

இது ‘பூக்கட்டி’ அருணாசலம் வீடுதானே.”

  

ஒரு காலத்தில் ‘பூக்கட்டி, பூக்கட்டி’ என்று தன்னை இளக்காரமாகப் பேசிய ஊரே, இப்போது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.