ஆறுமுகப் பாண்டி, எழுந்தான். அப்பாவைப் பார்த்தான். முதியோர் கல்வி இயக்கத்தால் கையெழுத்துப் போட மட்டுமே தெரிந்த பிள்ளையார், பதிவாளர் நீட்டிய பேனாவைப் பிடித்தபடியே யோசித்தார். அப்போது ஆறுமுகப் பாண்டி பழையபடி “சார்” என்று சொல்லிக் கொண்டே கீழே குனியப் போனபோது, பிள்ளையார் எழுந்தார். ஆறுமுகப் பாண்டியின் முடியைப் பிடித்து முகத்தை நிமிர்த்தி, கன்னத்தில் பட்டுபட்டு என்று அடித்து விட்டு, “செருக்கி மவனே. நீ எனக்குத்தானே பிறந்தே” என்று கத்தினார். பிறகு “எங்கையா கையெழுத்துப் போடணும்... இங்க... இதுலதானே...” என்றார். தோளில் கிடந்த துண்டை வாய்க்குள் வைத்துக்கொண்டே ஒரு முத்தை சொத்தையாக்கும் - முத்து முத்தாய் டைப் செய்த காகித அடியில் எழுத்துக் கூட்டிக் கையெழுத்துப் போட்டார். பிறகு சுயம்புவைப் பார்த்து “நடலே...” என்று அதட்டினார்.
-----------------
தொடரும்...