(Reading time: 2 - 3 minutes)

சக்கரை - சித்ரா

sugar

ரு நாள்  நம் திருவாளத்தான் நடந்து போகும் போது , பக்கத்துக்கு தெருவில் ஒரு வீட்டு  வாசலில் சக்கரை  கொட்டி  காய  வைக்க கண்டான் .

அருகில் நெருங்கி எண்ணனே  சக்கரையா ,நச நசன்னு இருக்கா ,அதான்  காய  போடறிங்களா என்று  கேட்டான் 

அவனுடைய போறாத காலம் ,சக்கரைனு   சொன்னா இவன் போக வர அள்ளி அள்ளி போட்டுப்பான்னு , இல்ல இது ஒரு வகை வெள்ளை மண்ணு ,அதன் காய வச்சு அள்ளி வச்சுகிறேன்  என்றான் 

திருவாளத்தானுக்கு  புரிஞ்சு போச்சு அவன் பொய் சொல்றான் , நாம சாப்பிட கூடாதுன்னு , இருக்கட்டும் அதுக்கு ஒரு வழி  பண்றேன் என்று கருவி கொண்டு  அங்கேருந்து அவன் வீட்டுக்கு போய் அவன் மகனிடம் ஒரு செய்தி சொல்லி விட்டு மறுபடியும் அதே வீட்டு  வாசலுக்கு வந்து சாதுவாக பேசிக்கொண்டிருந்தான் .

சற்று நேரத்தில் அவன் மகன்  அழுது  கொண்டே அங்கெ வந்தான் .

அருகில் கூப்பிட்டு என்ன என்று விசாரிக்க 

அப்பா நம்ம வீட்டு  கன்னுகுட்டி செத்து  போச்சு அப்பா என்றான் 

உடனே  நம்ம திருவாளத்தான்  ஐயோ மகனே நம்ம கிடேரி கன்னா  செத்து போச்சு , ஐயோ இந்தா உன் வாயில் கொஞ்சம் மண்ணு என் வாயில் கொஞ்சம் மண்ணு என்று கூறியபடியே பிடி பிடியாக அந்த சக்கரையை அள்ளி தானும் உண்டு மகனுக்கும் குடுத்தான் 

அப்புறம் என்ன பொய் சொன்ன அந்த ஆள் தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்து விட்டான்  

பாவம் உண்மையை சொல்லி இருந்தால் ஒரு கை பிடியோடு போக வேண்டிய விஷயம் இப்படி முதலுக்கே மோசம் ஆனது .

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.