(Reading time: 12 - 23 minutes)

 "ன் பிள்ளைகள் எங்கே இருக்கிறாங்களோ தெரியலையே? அவங்களைப் பிரிஞ்சு இருக்கிறது தான் எனக்குத் தண்டனை"ன்னு சொல்லி ரொம்ப வருத்தத்தோட இருந்தார்.அங்கே வீட்டை விட்டு வெளியே போன 3 பேரும் என்னச் செய்றாங்கன்னு பார்ப்போமா?

 ராமுக்கு மரச் சாமான்கள் செய்ற ஒருக் கடையில வேலைக் கிடைத்தது. அவன் தன்னோட வேலையை வெகு சிரத்தையோடச் செஞ்சு வந்தான். ஷாமுக்கு பெரிய பண்ணைல வீட்டு மிருகங்களான ஆடுகள், மாடுகள், கழுதைகள் மற்றும் கோழிகள் எல்லாவற்றையும் பரமரிக்கின்ற வேலைக் கிடைத்தது. ப்ரேம் மரச் சட்டங்கள் செய்கிற கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தான்.மூவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படவேயில்லை.

 ஒரு வருடம் கழிந்தது.மூவருக்குமே அவங்க அப்பாவைப் பார்க்கணும் என்று ஆசையாக இருந்தது.இப்போது அவரது கோபம் குறைந்திருக்கும் என்று எண்ணியவர்களாக தத்தம் எஜமானர்களிடம் தாங்கள் தங்கள் ஊருக்கு செல்லப் போகிறதாக கூறினார்கள்.முதலில் ராமின் எஜமானர் என்னச் சொன்னார் என்பதைப் பார்ப்போம். 

 "ராம், உனது நேர்மையான நல்ல குணம் எனக்கு மிகவும் பிடித்தது. உன்னைப் போல விசுவாசமான ஒருவனை நான் இழக்க விரும்பவில்லை ஆனால், நீ உன் அப்பா மேல் வைத்திருக்கும் அன்பிற்காக உன்னை நான் செல்ல அனுமதிக்கிறேன். உன்மேல் கொண்ட அன்பின் காரணமாக நான் உனக்கு என்னிடம் உள்ள :மந்திர டேபிளை பரிசாகத் தர நினைக்கிறேன்" என்றுச் சொல்லி,

 ஒரு அழகான டேபிளை அவனுக்குக் கொடுத்தார். அந்த டேபிளிடம் நாம் என்னக் கேட்கிறோமோ அந்த உணவை தரும். அதுவும் வித விதமான , ருசி ருசியான உணவு வகைகள்.அவனும் அதை எடுத்துக் கொண்டு தன்னுடைய ஊருக்குப் புறப்பட்டான். செல்கின்ற வழியில் இரவாகி விடவே ஒரு இரவு விடுதியில் தங்கினான். அந்த இரவு விடுதியின் உரிமையாளன் பெயர் ராஜூ அவன் மிகவும் பேராசை மிக்கவன். எப்படியாவது நிறைய செல்வங்கள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.

 ராம் தன்னுடைய விடுதியில் தங்கவும், அவனிடம்,

" நீ இரவு உணவிற்காக என்னச் சாப்பிடுகின்றாய்?" என்று ராஜூ கேட்க, ராம் தனக்கு எதுவும் வேண்டாம் என்றுச் சொன்னான். வெகு தொலைவிலிருந்து நடந்து வருகின்றவன், அதிலும் கையில் உணவுப் பொட்டலங்கள் எதுவும் கொண்டு வராதவன், சாப்பாடு வேண்டாம் என்றுச் சொன்னதும் ராஜுவுக்கு காரணம் அறிந்துக் கொள்ள ஆர்வம் உண்டாயிற்று.

 ராம் அறையுள் சென்ற பின் அவன் எனச் செய்கிறான் என்றுப் பார்க்க ஒளிந்து நின்றான். ராம் தன்னைச் சுத்தம் செய்துக் கொண்டு தன் முன்னால் அந்த டேபிளை வைத்து அவனுக்கு வேண்டிய உணவு வகைகள் ஒவ்வொன்றாகச் சொல்ல அதுவும் உடனே வந்தது. வயிறாரச் சாப்பிட்ட பின்னர் வெகு தூரம் நடந்த களைப்பில் அசந்து தூங்கினான்.

 அதைக் கவனித்த ராஜூ நாம் இந்த டேபிளை அபகரித்தால் எவ்வளவு லாபம் என்றெண்ணியவனாக நட்ட நடு ராத்திரியில் அதே போன்ற ஒரு டேபிளை கொண்டுச் சென்று ராமின் அறையில் வைத்து விட்டு அவனுடைய மந்திர டேபிளை எடுத்துச் சென்றான். ராம் அதை அறியாதவனாக காலையில் எழுந்து ராஜூ மாற்றிய அந்த டேபிளோடு தன்னுடைய ஊருக்குச் சென்றான்.

 ருக்குச் சென்று அவன் தன்னுடைய தந்தையை சந்திக்கவும், அவர் தன்னுடைய செயலுக்கு மிகவும் வருந்தினார். தன்னுடைய தம்பிகளையும் தந்தை விரட்டி விட்டார் என்று ஆதங்கம் ராமுக்கு எழுந்தாலும் அதைச் சொல்லி ஏற்கெனவே வருந்திக் கொண்டிருக்கிற தன்னுடைய தந்தையை வருத்தக் கூடாது என்கிற எண்ணத்தால் அவன் ஒன்றும் கூறவில்லை. சில நாட்கள் கழித்து தன் தம்பிகளைத் தேடச் செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

 தன் தந்தையிடம் தனக்கு கிடைத்திருக்கிற மந்திர டேபிளைக் குறித்து மகிழ்ச்சியுடன் கூறினான். தாம் அந்த டேபிளைக் கொண்டு ஊர் முழுக்க ஒரு விருந்துக் கொடுக்க விரும்புவதாகவும் கூறினான். அவன் தந்தைக்கு அது கேட்டு மிகவும் மகிழ்ச்சியாயிற்று. சரி நாளை விருந்துக் கொடுக்கலாம் இன்று அதன் மந்திர சக்தியை நான் இரவு உணவின் போது பார்க்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார். சரி அப்பா என்றவன் இரவு அவர்கள் இருவரும் சாப்பிட ஆயத்தமாக உணவு வகைகளை டேபிளிடம் கூறத் தொடங்கினான். ஆனால், அந்த டேபிள் மந்திர சக்தி இல்லாதது ஆயிற்றே.......ஒரு உணவையும் வரக் காணோம். அதிர்ச்சியுடன் தன் தந்தையை நோக்கினான். ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது என நினைத்து அவர் அவனைத் தேற்றிக் கொண்டார். எது எப்படியோ ஊரார் முன்னிலையில் அவமானப் பட நேராமல் பிழைத்தோமே என்று அவன் எண்ணிக் கொண்டான்.ஆனால், டேபிளுக்கு என்னவாயிற்று என்று அவனுக்கு புரியவே இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.