Nenchil Payuthe minalaa - Tamil thodarkathai
Nenchil Payuthe minalaa is a Romance genre story penned by Sweet Princess.
This is her first serial story at Chillzee.
முன்னுரை
வைஷ்ணவி, அர்ஜுன் இருவருமே ஒருவரை ஒருவர் வெறுப்பவர்கள்! அவர்கள் எதிர்பாராத விதத்தில் அவர்களுக்கு திருமணம் நடந்து விடுகிறது. விரும்பாத இந்த திருமணம் வெறுப்பை காதலாக மாற்றுமா?
-
தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 01 - Sweet Princess
“பேசினா என்ன? அவனை மாதிரியான பொறுக்கியை எல்லாம் இன்னும் கேவலமா திட்டனும். காலேஜ் தான் எந்த ஆக்ஷனும் எடுக்கலை. சரியான பொறுக்கி!”
“வைஷ்ணவி!” என்று ரமேஷ் இப்போது அதட்டி அவளை நிறுத்த சொன்னார்.
“நான் அவனை பத்தின உண்மை தானே டாடி சொல்றேன். உங்களுக்கும் தெரியாதா
... -
தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 02 - Sweet Princess
பார்த்தவன் ஷாக் அடித்ததுப் போல அதிர்ந்துப் போனான்! அவள் அவனுக்கு தெரிந்த வைஷ்ணவியே தான். ஆனால் புடவை கட்டி பூ எல்லாம் வைத்து பெண்ணாக நின்று இருந்தாள். அவள் கட்டி இருந்த ஷிபான் சேலை வேறு அவளின் அங்க வளைவுகளை தேவைக்கு அதிகமாக வெளிப்படுத்தி எழிலாக காட்டியது! இவள் அதே குண்டெலி வைஷ்ணவி தான் என்று
... -
தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 03 - Sweet Princess
வைஷ்ணவி எட்டிப் பார்த்தாள். அர்ஜுன் பரிதாபமாக ராகவி பக்கத்தில் அமர்ந்திருந்தான். இவனை கல்யாணம் செய்து தான் ஆக வேண்டுமா? இவனுடன் அவள் எப்படி வாழ்வாள்? அதற்கு மேல் வைஷ்ணவி எதுவும் பேசவில்லை. ராகவியும், அர்ஜுனும் கிளம்பி போகும் வரைக்கும் வாயை மூடியே வைத்திருந்தாள். நாலு
... -
தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 04 - Sweet Princess
“பஞ்சையும் நெருப்பையும் பக்கத்து பக்கத்துல வச்சா என்ன ஆகும்? பிடிக்கலை பிடிக்கலைன்னு கத்தினாலும் நீயும் அர்ஜுனும் மட்டும் தனியா அந்த வீட்டுல இருக்கப் போறீங்க. அப்புறம் என்ன ஆகும்? நெருப்பு பத்திக்கும் வேற என்ன! அதோட, ஆல் மேட்டர் க்ளோஸ்ட். செம
... -
தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 05 - Sweet Princess
இப்படி ஒரு திருமணம் நடந்ததே கிடையாது என்று பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு கல்யாண மண்டபம் மட்டும் அல்லாமல் மண்டபம் இருந்த மொத்த பகுதியே அலங்கரிக்கப் பட்டு இருந்தது. வைஷ்ணவியின் உறவினர்கள் மட்டும் அல்லாமல் ஹேமா, ரமேஷிற்கு
... -
தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 06 - Sweet Princess
“அம்மா கிட்ட பேசி கல்யாணம் வேண்டாம்னு சொல்ல தைரியம் கிடையாது. உனக்கெல்லாம் இந்த் வெட்டி வீராப்பு வேற! வாயை திறந்த நான் மனுஷியாகவே இருக்க மாட்டேன்.”
அர்ஜுனுக்கு என்னவோ மாதிரி இருந்தது. இருந்த போதும் சும்மா இருக்க முடியாது, “நீ மட்டும் என்னவாம்?” என வெட்டி வீறாப்புடன் கேட்டான்.
-
தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 07 - Sweet Princess
“பைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு கூட இப்படி இருக்காது ரியா!” வைஷ்ணவி தன் முன்னே இருந்த உணவுகளை காட்டினாள்.
“தினம் தினம் இப்படி சாப்பாடு கிடைக்கும்னா அர்ஜுன் மாதிரி ஒரு இம்சையை கல்யாணம் செய்துக்கலாம் போல இருக்கே!”
“உனக்கு எதுக்கு ரியா அந்த தலை எழுத்து. நீயாவது பிடிச்சவனா கல்யாணம்
... -
தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 08 - Sweet Princess
நாட்கள் மெதுவாக போய் கொண்டிருந்தது.
அர்ஜுன், வைஷ்ணவி உறவில் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வைஷ்ணவி அர்ஜுன் முகத்தை பார்க்கவே பிடிக்காமல் வெறுத்தாள். அர்ஜுனோ வைஷ்ணவி இருக்கும் இடம் பக்கத்தில் கூட போவதை
... -
தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 09 - Sweet Princess
அர்ஜுன் வைஷ்ணவி ஜோடியாக ஆடம்பர உணவகத்திற்கு வந்தார்கள். வீட்டில் இருந்துக் கிளம்பும் போது தவறாமல் ராகவியிடம் அவர்கள் போகும் இடத்தைப் பற்றி சொல்லி விட்டே வந்தான் அர்ஜுன். அவர்கள் ஜோடியாக செல்வது ராகவிக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதை இருவராலுமே
... -
தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 10 - Sweet Princess
வைஷ்ணவி கண் விழித்தப் போது முதலில் எங்கே இருக்கிறாள் என்பதே புரியாமல் விழித்தாள். மெல்ல மெல்ல அறிவு கண் விழித்துக் கொள்ளவும், அர்ஜுன் ரூமிற்கு தூங்க வந்தது நினைவுக்கு வந்தது.
கட்டிலின் மறுபக்கம் பார்த்தாள். அங்கே
... -
தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 11 - Sweet Princess
அவள் அவனை பார்த்துக் கொண்டு இருப்பது தெரியவும், சிந்திக்க நொடியும் எடுக்காது தன் டிஷர்ட்டை கழற்றி எடுத்தான்.
டோன் செய்யப்பட்ட தன் முதுகு, அழகான வடிவம் கொண்ட தன் தோள்கள், உடற்பயிற்சியின் பலனாக உருண்டு திரண்டிருந்த கைகள் என அனைத்தும் அவளுக்கு தெரியும் என்பது அவனுக்கு நன்றாகவே
... -
தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 12 - Sweet Princess
வைஷ்ணவி அந்த இரவு தூங்கவே இல்லை. அர்ஜுன் நடந்துக் கொண்டிருந்த விதம் அவளுடைய தூக்கத்தை கெடுத்து இருந்தது.
அவன் அவளிடம் விளையாடுகிறானா அல்லது எதையாவது எதிர்பார்க்கிறானா என்று அவளால் தெளிவாக சொல்ல முடியவில்லை.
என்ன என்னவோ
... -
தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 13 - Sweet Princess
அடுத்து வந்த சில நாட்கள் வைஷ்ணவி அர்ஜுன் பக்கம் போவதையே தவிர்த்துக் கொண்டிருந்தாள்.
ராகவி மருத்துவத்திற்காக கிராமத்திற்கு செல்கிறேன் என்று சென்று விட்டது அவளுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
நடந்த ஷவர் விபத்திற்குப் பிறகு
... -
தொடர்கதை - நெஞ்சில் பாயுதே மின்னலா... - 14 - Sweet Princess
அர்ஜூன் என்ன செய்வது என்று யோசித்து யோசித்து தலையை பிய்த்துக் கொண்டான். உருப்படியான ஒரு யோசனையும் அவனுக்கு தோன்றவில்லை. அவன் மட்டும் தனியாக போனால் சரியாக இருக்காது. அவன கல்யாணம் செய்திருக்கும் குட்டி பிசாசு உடன் வருவதாகவும் தெரியவில்லை.
...