Sirikkum Rangoli - Tamil thodarkathai
Sirikkum Rangoli is a Romance / Family genre story penned by Yash.
This is his second serial story in Chillzee.
சிரிக்கும் ரங்கோலி எனும் இந்த கதை குடும்பம் + காதல் கதை.
மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த ஆதி தன் தொழில் நுட்ப அறிவை வைத்து வாழ்வில் முன்னேற விரும்புகிறான். அவனுடைய குடும்ப சூழ்நிலைகளும், பொறுப்புகளும் அவனை அப்படி செய்ய முடியாமல் தடுக்கின்றன. அவனின் அக்கா சான்வி, தன் தம்பிக்கு துணை நிற்கிறாள். அவள் எல்லா விதத்திலும் ஆதிக்கு உதவுகிறாள். இந்த அக்கா - தம்பியின் நடுவே விவேக் - அக்ஷரா எனும் அண்ணன், தங்கை வருகிறார்கள்.
தம்பி, குடும்பம், பொறுப்பு என்று இருக்கும் சான்வியின் மனதில் காதல் எனும் பூ மலருமா? அப்படி மலர்ந்தால் அது ஆதித்யாவின் ஆசைகளுக்கு கடிவாளம் இடுமா, அல்லது சான்வியின் வாழ்வில் மகிழ்ச்சியையும், வசந்தத்தையும் கொண்டு வருமா???
Check out the Sirikkum Rangoli story reviews from our readers.
Feel free to Add your Review by clicking here.
-
தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 01 - யாஷ்
அம்மா போனதும் அக்காவை பார்த்து சிரித்தான் ஆதித்யா.
“நைட் எப்போ வந்த ஆதி? பத்தரை மணிக்கு பார்த்தப்போ நீ இல்லை?” சான்வியின் கேள்வியில் அக்கறை நிறைந்திருந்தது.
“பன்னெண்டு மணி ஆச்சு சான்வி. காஷ்யாப்பும் நானும் மணியை பார்க்காம வேலை செய்துட்டு இருந்தோம்.”
“நீ
... -
தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 02 - யாஷ்
“ஆதி, உன் அக்கா உன் மேல எந்த அளவுக்கு பாசம் வச்சிருக்கான்னு நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியதில்லை! அவளுக்கும் நிறைய ஆசை இருந்தது. ஆர்கிடெக்ட் படிக்கனும்னு கனவு கண்டுட்டு இருந்தா, ஆனால் என்னால அவளுக்கு பீஸ் கட்ட முடியலை. ஆனால் நீ காலேஜ் போற வயசு வந்தப்போ அவளும்
... -
தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 03 - யாஷ்
“நீ எப்போதுமே பொறுப்பில்லாதவன் கிடையாது ஆதி. இந்த வயசுல தான் இந்த மாதிரி முயற்சியை எல்லாம் செய்ய முடியும். இப்போவே எவ்வளவு பொறுப்பு இருக்கு, அப்போ பத்து வருஷம், இருபது வருஷம் கழிச்சு யோசிச்சுப் பாரு? அம்மா அப்பாவை பத்தி நீ கவலைப் படாதே. நான் அவங்களை பார்த்துக்குறேன். நீ உனக்கு பிடிச்சதை
... -
தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 04 - யாஷ்
ஆதித்யா எதையும் யோசிக்காமல் அவளை உற்றுப் பார்த்தான். மஸ்காரா அணிந்திருந்த கண்கள் பட்டாம்பூச்சியாக இமைத்துக் கொண்டிருக்க, சிவப்பு நிற லிப்ஸ்டிக் அணிந்த உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன! ஏன் நடுங்குகிறது? அவளை சுற்றி ஆறு ஏழு பேர் நின்றிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் சிரிப்பு இருந்தது. அவள்
... -
தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 05 - யாஷ்
“விடுங்க எல்லோருக்கும் நம்மளை புரியாது.”
“எனக்கு அது தான் புரியலை, ஆதித்யா. எங்கப்பா பணக்காரரா இருந்தா எனக்கு எதிலேயுமே உண்மையான ஆர்வம் வரக் கூடாதா? நான் என்ன செய்தாலும் எங்கப்பா பணம் வழியா நான் செய்றேன்னு நினைக்குறாங்க, குத்திக் காட்டுறாங்க. எனக்கு அறிவே இல்லைன்னு
... -
தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 06 - யாஷ்
சான்வி புன்னகை நிறைந்த முகத்துடன் இல்லை என தலையை ஆட்டினாள். அவளின் சிரிப்பே அவள் சொல்வதற்கு எதிர்மறையான பொருளைக் கொடுத்தது.
“நீங்க சிரிக்குறதை பார்த்தா நிறைய பேசுறேன்னு புரியுது. சாரிக்கா, நான் வாயை திறந்தா மூடவே மாட்டேன். நீங்க ஆதி கிட்ட பேசுங்க. எங்க இரண்டு பேருக்கும் விஷ்
... -
தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 07 - யாஷ்
விவேக் பேச்சில் கலந்துக் கொள்ளாமல் கேட்க மட்டும் செய்துக் கொண்டே சாப்பிடும் வேலையை செவ்வனே செய்துக் கொண்டிருந்தான். உணவு உள்ளே சென்றதும், பசி மெல்ல அடங்கியது. அப்போதும் கூட அக்ஷராவின் ஆதித்யா புகழ் கேட்க அவனுக்கு விருப்பம் இருக்கவில்லை. ஆனால் அந்த ஆதித்யாவின் அக்கா பற்றி தெரிந்துக்
... -
தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 08 - யாஷ்
“சான்வி,’ மெதுவாக அழைத்தான் விவேக்.
அவனின் அழைப்பின் காரணமாக சான்வியின் கன்னங்கள் இன்னமும் அதிகமாக சிவந்தன. விவேக்கின் இதயத் துடிப்பு அதிகம் ஆனது.
“சான்வி,” என்று மீண்டும் அவன் அழைத்தப் போது குரல் ரகசியமாக, கரகரப்பாக
... -
தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 09 - யாஷ்
நினைத்ததுப் போலவே ஒன்-வே கம்யூனிகேஷன் ஆரம்பித்து வைத்து விட்டான்! விவேக்கிற்கு திருப்தியாக இருந்தது! சான்வியும் அம்மாவும் நட்போடு இருப்பது ரொம்பவும் முக்கியம்! அப்போது தான் பிற்காலத்தில் கல்யாணம் என்று அவன் பேசும் போது பிரச்சனைகள் வராமல் இருக்கும்! இனி அடுத்து ஆதித்யாவை அவன் கைக்குள் போட்டுக்
... -
தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 10 - யாஷ்
“வழில வர தடங்கல்கள் எல்லாமே நாம நம்ம கடைசி இலக்கை அடைய வரும் படிகற்கள், ஆதித்யா. மகாபாரதத்துல அர்ஜுன் கண்ணுக்கு இலக்கா இருந்த குருவி மட்டும் தெரிஞ்ச கதை நீயும் கேட்டிருப்பீயே? டார்கெட் செட் செய்து வச்சுட்டு நேரா ப்ளான் செய்து போயிட்டே இருக்கனும். வழில பல ஆயிரம் தடைகள் வரும். அதுக்காக டென்ஷன்
... -
தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 11 - யாஷ்
“ஹோட்டல் சீசன்ஸ் போர்ல தங்கி இருந்தேன்னா சொல்ற?” நித்தின் ஆச்சர்யத்துடன் கேட்டார்.
ஆதித்யாவிற்கு அவரின் ஆச்சர்யத்திற்கு பின்னால் இருக்கும் காரணம் விளங்கவில்லை. விவேக்கிற்கு புரிந்தது.
“அவங்களுக்கு அந்த ஹோட்டல் ரேட் பத்தி
... -
தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 12 - யாஷ்
கேள்வி கேட்ட பெண்மணி அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார்.
அவருக்கு ஆதித்யா சொன்ன பதில் புரியவில்லையோ என்ற எண்ணம் அக்ஷராவிற்கு ஏற்பட்டது.
“ஆதி சொன்னதையே நான் ஸ்ட்ரெஸ் செய்து திரும்ப சொல்றேன்,” எனத் தொடங்கி, அழகான ஆங்கிலத்தில் அவன் சொன்ன பதிலை தெளிவாக எடுத்து சொன்னாள் அக்ஷரா.
-
தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 13 - யாஷ்
மொபைலை மேஜை மேலே தூக்கிப் போட்ட விவேக், அலுப்புடன் குஷன் நாற்காலியின் மேலே விழுந்தான்.
சமையலறையில் வேலையாக இருந்த ஹரிணிக்கு அந்த சத்தம் கேட்கவே, யார் என்று எட்டிப் பார்த்தாள். விவேக் என தெரிந்தது அவளின் முகம்
... -
தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 14 - யாஷ்
விவேக்கின் மனசுக்குள் படபடப்பு வந்தாலும் உடனே சமாளித்துக் கொண்டான்.
“போன் பேச வந்தேன் அம்மா.” ஈசியாக சொல்லி சமாளிக்க முயற்சி செய்தான்.
“அது என்னோட போன்.” ஹரிணி அவன் கையில் வைத்திருந்த போனை காண்பித்து சொன்னாள்.
“ஆமா,
... -
தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 15 - யாஷ்
“ஆதி?” ஆதித்யா தூங்கி இருப்பானா என்ற சந்தேகத்துடன் கதவை மெதுவாக தட்டினாள் அக்ஷரா.
ஆதித்யா உடனடியாக கதவை திறந்தான்.
“உனக்கும் தூக்கம் வரலையா ஆதி?”
ஆதித்யா இல்லை எனும் அர்த்தம் வருவதாக தலையை
...
Page 1 of 2