பேய் சார், என் கிட்ட 267 ரூவா தான் இருக்குது....
அடுத்து என்னவோ என்று நினைக்குமுன் அவனிடமிருந்து ரூபாயை வாங்கிக் கொண்டு புத்தகத்தை கொடுத்து விட்டது.
ஹப்பாடா , நாம பொழைச்சோம் என்று ஆசுவாசப் பட்டவன் அங்கிருந்து நடுங்கிக் கொண்டே மெதுவாக நகர மறுபடி அதே குரல்,
ஒரு கண்டிஷன்
...என். ..ன. டைப்படித்தது பற்கள்.
அந்த புக்ல கடைசி பக்கத்தை மட்டும் திரும்பி பார்க்க கூடாது..
சரி...ரி..ரி..
அங்கிருந்து ஓட ஆரம்பித்தவன் வீடு வந்ததும் தான் நின்றான்.
கதவை திறந்தவர்,
என்னடா மருமகனே என்ன ஆச்சு?
பதில் சொல்லும் நிலையிலா இருக்கிறான்.
மணித்துளிகள் கடந்தன..அவனால் தூங்க முடியவில்லை.விடிவதற்கும் நேரமிருக்கிறது. என்ன செய்யலாம் என்று நினைக்கையில் தான் அந்த புத்தகம் ஞாபகம் வந்தது.
சுவாரஸ்யமான கதை அது....பாதி வாசிக்கையில் இயற்கை உந்துதல் ஏற்பட போய் வந்தவன் கவனித்தான்.
தான் ஜன்னலருகில் கவிழ்த்து வைத்திருந்த புத்தகம் முற்றும் கடைசி பக்கம் வரை திறந்து கிடந்தது.
....அந்த புக்ல கடைசி பக்கத்தை மட்டும் திரும்பி பார்க்க கூடாது..
மனதில் பேயின் குரல் உரத்து ஒலிக்க , இதயம் தம் தம் என்று முரசுக் கொட்ட அருகே நெருங்கினான்.
கிட்டே வந்து விட்டான்.
பார்க்கவா வேண்டாமா? எனும் போராட்டம்...
கடைசியில்
அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்து விடுவோமே
என்று எண்ணி புத்தகத்தை கையில் எடுத்து
திரும்பி இருந்த கடைசி பக்கத்தில்
கண்களைப் பதித்து
வாசித்தான்.
அதில்
எழுதி இருந்தது.
Book Price Rs.20/-
Promotional price Rs.10/- only
{kunena_discuss:785}