என்று இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன், அந்த ஆடியோ ஆதாரம் தன் மூச்சை நிறுத்திக் கொண்டது.
மிகுந்த யோசனையில், சற்றே முகம் மாறியிருந்த இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மா,
டவர் இன்ஜினீயர் சிவராம்ஜியைப் பார்த்து,
“சிவராம்ஜி...! அந்த CROSS TALK CALLERS-ரோட DISTANCE எவ்ளோ இருக்கும்னு நெனைக்கிறீங்க...?”
சற்றும் தாமதிக்காத சிவ்ராம்ஜி,
“சார்... கண்டிப்பா ஒரு பத்து கிலோமீட்டர் சுற்றளவுல தான் சார் இருக்க முடியும்... நான் ஏன் இதைக் கண்டிப்பா சொல்றேன்னா... நான் டவர் RADIATION AND FREQUENCY செக் பண்ணும்போது, மத்த டவரோட CONNECTION எல்லாம் CUT பண்ணிட்டு தான் OPERATE பண்ண ஆரம்பிப்பேன். அப்ப ONLY லோக்கல் செக்டார் மட்டும் தான் ACTIVE ஆக இருக்கும்... SO பேசுற கால் எல்லாம் லோக்கல் கால்ஸ் மட்டும் தான் சார்... ”
“ஹ்ம்ம்... அப்ப பேசுன ரெண்டு பேருமே பத்து கிலோமீட்டர் SURROUNDING-ல தான் இருக்காங்க... சூப்பர்…” என்ற அவர் எதிரே இருந்த கரும்பலகையில், ஒரு வட்டமிட்டு அதில் பத்து கிலோமீட்டர் சுற்றளவை குறித்திருந்தார்.
“அப்புறம்... இந்த ஆடியோவோட LENGTH எவ்வளவு இருக்கும்...?”
“சார்... MAXIMUM 3 மினிட்ஸ் சார்...”
“3 மினிட்ஸ்... ஹ்ம்ம்...“ என்று யோசித்த அவர்,
“சரியா… என்ன டைம்ல உங்களுக்கு இந்த CROSS TALK கால் ரிசீவ் ஆச்சு...?” என்றார்.
“சார்... கரெக்டா காலைல 9 மணியிலிருந்து இருந்து 9.10க்குள்ள இருக்கும் சார்...”
கரும்பலகையில் மீண்டும் , காலை (9.00 -9.10 ) என்று தெளிவாகக் குறித்துக் கொண்டு, தன் பின்னால் நின்று கொண்டிருந்த குர்தாஸ் சிங்க்கை ஏறிட்ட விகாஷ் சர்மா,
“குர்தாஸ்... இதுவரைக்கும் உங்களால ஏதாவது யூகிக்க முடிந்சுதா...?”
“இல்ல... சார்... இந்த ஆடியோவ வச்சு, அவுங்கள TRACE பண்றது ரொம்ப கஷ்டம்ன்னு நான் நெனைக்கிறேன் சார்...”
ஒரு பத்து நிமிட மௌனம்.
இன்ஸ்பெக்டர் விகாஷ் சர்மா, ஏதோ ஒரு யோசனையில், மீண்டும் மீண்டும் அந்த ஆடியோ ஆதாரத்தையே PLAY செய்து கேட்டுக் கொண்டிருந்தார். அங்கு இருந்த அனைவரும் ஒன்றும் புரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். இப்படியே ஒரு அரை மணி நேரம் வேகமாக கடந்திருந்தது. அவர் தன் மூளைக்குள் ஒரு மௌனப் போராட்டத்தையே நடத்தியிருந்தார்...
கரும்பலகையில் எழுதப் பட்டிருந்த குறிப்புகளைப் பார்த்துக் கொண்டே, கடைசியாக ஒரு முறை அந்த ஆடியோ ஆதாரத்தை PLAY செய்த இன்ஸ்பெக்டர் விகாஷ் ஷர்மா, சரியாக 2.45 ஆவது நிமிடத்தில் இருந்து, அதை PAUSE செய்து கொஞ்சம் முன்னால் சென்று அதை REWIND செய்து கேட்டுப் பார்த்த அவர் திடுக்கிட்டார்.
இந்த முறை அவர் முகத்தில் ஒரு சிறிய மாற்றம் தெரிந்திருந்தது.
விசாலமாக இருந்த அந்த இராணுவ மருத்துவக் கூடம் சற்றே பரபரப்புடன் காட்சியளித்தது. “சாவைப் பற்றி நீ கவலைப் படாதே. நீ இருக்கும்போது அது வரப்போவதுமில்லை. அது வந்த பின் நீ இருக்கப் போவதுமில்லை” என்ற விவேகானந்தரின் வாசகத்தோடு கூடிய, அவரின் கம்பீரமான புகைப்படங்கள் அந்த மருத்துவக் கூடத்தின் சுவர்களை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. அதன் பதினாறாவது அறையில், ஜாஃபரும் ஆர்யாவும் தங்களின் காயங்களுக்கான சிகிச்சைப் பிரிவில் உலாவிக் கொண்டிருந்தனர். ஜாஃபரின் வலது தோள்பட்டையை சுற்றி ஒரு பெரிய கட்டு போடப் பட்டிருந்தது . கையை அசைத்து அசைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அவனை ஏறிட்ட ஆர்யா,
"என்ன ஜாஃபர்...! ரொம்ப வலிக்குதா...???" என்றான்.
"அவ்வளவு ஒன்னும் பெருசா வலிக்கல ஆர்யா... காயம் சின்னதுதான். ஆன கட்டு தான் பெருசா போட்ருக்காங்க..."
"என்னடா சொல்ற…? உண்மையாலுமே வலி இல்லையா…? அவ்வளவு ரத்தம் போச்சேடா...?” என்றான் சிரித்துக் கொண்டே.
"டேய்... இதெல்லாம் ஒரு வலியா...?? இருந்தாலும், நீ சாதாரணமான ஆளே இல்லடா ஆர்யா..."
"ஏன் அப்படி சொல்ற ஜாஃபர்...?”
"எப்படிடா...? அவனுங்க சுடுவாங்கன்னு தெரிஞ்சே… அவ்வளவு தைரியமா எழுந்து அவங்க முன்னாடி ஓடுன??"
"அது எல்லாம் ஒரு பயிற்சி தாண்டா ஜாஃபர் ..." என்றான் சிரித்துக் கொண்டே.
"என்னது பயிற்சியா...? அவனுங்க சுட்ட ஒரு தோட்டா, உன் மேல பட்டிருந்தாலும் நீ இந்நேரம் என் முன்னாடி நின்னு பேசிட்டு இருக்க மாட்ட தெரியுமா...?. நானே ஒரு நிமிஷம் பயந்துட்டேன்..." என்றான் ஆர்யா.
“ஆனா, அதுக்கு வாய்ப்பே இல்ல ஜாஃபர்... அவனுங்க தோட்டா என்ன தொட்டிருக்கவே முடியாது."
"எப்படி இவ்வளவு நம்பிக்கையா சொல்ற ஆர்யா...?" என்றான் ஆச்சர்யமாக.