" சரி, நீங்க சொல்றதும் கரெக்ட்தான்! ஓ.கே.! அப்ப மருந்து மாத்திரை நிறையவே தரேன், அவங்களை கிராமத்துக்கு திருப்பி அனுப்பிடுங்க!..........நர்ஸ் மேரி! நீ என்னோட என் ரூமுக்கு வந்து நான் எழுதித்தர மருந்து, மாத்திரை, டிஸ்சார்ஜ் சம்மரியை இவங்ககிட்ட கொடுத்து அனுப்பிடு, கடவுளிடத்திலே குழந்தையை ஒப்படைச்சிடுவோம்....."
" ஒரு நிமிஷம், டாக்டர்! ஒரு விஷயம் நான் சொல்லலாமா?"
" தாராளமா, மேரி! நீ இவங்களை மூணுநாளா சாப்பாட்டு போட்டு காப்பாத்தியிருக்கே, உனக்கு கொஞ்சம் உரிமை உண்டு........"
" டாக்டர்! இவங்களுக்கு மூணு நாளா சாப்பாட்டு போட்டது, நானில்லை, ஏசுநாதர்! அந்த ஏசுநாதரை நம்பி மருந்து மாத்திரை கொடுத்து வீட்டுக்கு அனுப்பறதுக்குப் பதிலா, ஆபரேஷன் பண்ணுங்க ஏசுவை நம்பி! அவர் குழந்தையை கட்டாயம் காப்பாத்துவார். பேசறது, நானில்லை, ஏசுநாதர்!"
ஆவேசம் வந்தவள்போல் மேரி பேசியதை கேட்டு டாக்டரும் நண்பரும் ஆடிப்போய்விட்டனர்.
கடவுள்மீது பாரத்தை போட்டு, அறுவை சிகிச்சை நடந்தது.
அந்த பத்து சதவிகித சான்ஸ் இந்தக் குழந்தைக்கு கிடைத்தது!
குழந்தை அழுகையை நிறுத்தி, வாய் திறந்து சிரித்ததைப் பார்த்து, அந்த அப்பாவி பெற்றோர் முகம் மலர்ந்ததை கண்ட நண்பரும், டாக்டரும், நர்ஸ் மேரிக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தனர்.
" நோ நோ! ஏசுநாதருக்கு போய் சேரணும், உங்க நன்றியும் வணக்கமும்!"