கொடுக்க வேண்டும்..என று மனத்திற்குள் ஆழமாக சொல்லிக்கொண்டே வீடு வந்தேன்.உள்ளே அவள் எங்கள் மகனுடன் அலைபேசியில் பேசிக்கொண டிருந்தாள்.பலமுறை எங்களை அமெரிக்கா அழைத்திருக்கிறான்.எனக்கு தான் அங்கு ஈடுபாடில்லை.என்னை சம்மதிக்க அவன் அவ்வப்போது அம்மாவை உபயோகிப்பான்.
“இல்ல கண்ணா.பாவம் அப்பா இவ்வளவு நாள் ஓடிஓடி உழைச்சிருக்கார்.என்னை நல்லபடியா தான் வச்சிருந்தார்.இப்பவும் என்னை வெறுக்கிறது இல்ல.ஒரு வார்த்தை கடிஞ்சு பேசறது இல்ல.என்னால முடிஞ்ச வரைக்கும் …அவரை பத்திரமா பார்த்துக்கனும்..அவரும் ஒரு குழந்தை தான் சந்தோஷமா வச்சிகனும்.அவ்வளவு தான் நான் நினைக்கிறேன். இன்னைக்கு அப்பாவோட கோவில் போகனும்.இப்ப ஸ்கைப் வர முடியாது.நீ நைட் ஸ்கைப் பேசு கண்ணா சரியா..உடம்பு பார்த்துக்கோ.அவளையும் பார்த்துக்கோ.பை கண்ணா”
அவள் மனம் எனக்கு நன்றாய் புரிந்தது.”விஜி”பல வருடம் கழித்து அவளை அப்படி அழைத்தேன்.என்னை அறியாமலேயே.சற று திடுக்கிட்டு திரும்பியவள்
“என்ன கூப்டீங்க”
“விஜி ன்னு ஏன உன்னை அப்படி தானே கூப்படுவேன்”
“ஆமா ஆமா..அது நம்ம பொண்ணு பிறக்கிறது முன்னாடி…அத விடுங்க..எங்க போனீங்க..கோவில் போயிட்டு வந்துடலாம்.கிளம்புங்க”
“நீங்க சொன்னா நான் செய்ய வேண்டியது தான்.வாங்க”
இனி ஒவ்வொரு கனமும் அவளுடன் கைக்கோர்க்க முடிவு செய்து அவள் கைப்பற்றிக்கொண்டேன்.மகிழ்ச்சியில் அவள் முகம் மலர்ந்தது இப்போது எனக்கு நன்றாய் தெரிந்தது.