சிறுவர்களின் மேல் பதிந்தது.
அந்த சிறுமி தன் குளிர் கோட்டை கழற்றி அந்த சிறுவனுக்கு கொடுத்தாள். இப்போழுது கந்தல் உடையில் காணப்பட்ட சிறுவனின் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்.
உடனே அந்த சிறுவன் அந்த சிறுபெண்ணை அங்கயே அமர வைத்து விட்டு ரோட்டை கிராஸ் செய்து வேகமாக ஓடினான். தன்னிடன் இருந்த பணத்தை கொண்டு டீயும் பன்னும் வாங்கியவன் அதை கொண்டு வந்து சிறுமியிடம் கொடுத்தான். இருந்த பசியில் ஒரு நொடியில் பன்னை காலி செய்தவள் டீயையும் குடித்து விட்டு சிறுவனை பார்த்து ஒரு புன்னகை புரிந்தவள் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
இதை பார்த்து கொண்டிருந்த அபிஷேக் மனதில் ஒரு கேள்வி பிறந்தது. அந்த சிறுமி யார்? விடை தெரிந்து கொள்ளும் ஆவலில் அருகில் இருந்த சிறுவனை பார்த்து சிரித்தான்.
தம்பி, அந்த குட்டி பொண்ணு யார் என்று வினவினான். அந்த சிறுவன் அதற்கு அளித்த பதில் அபிஷேக்கின் மனதில் ஒரு வலியை கொடுத்தது. அந்த சிறுமி அநாதை. பக்கத்து பிளாட்பார்மில் தங்கியிருக்கிறாள் என்றான்.
மீண்டும் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில் அவள் ஏன் உனக்கு டிரஸ் கொடுத்தாள். நீ ஏன் அவளுக்கு பன் வாங்கி கொடுத்த என்றான்.
அவளுக்கு போட கிழியாத டிரஸ் இருக்காம். அதனால இன்னைக்கு யாரோ கொடுத்த குளிர் கோர்ட்டை எனக்கு தர வந்தாளாம். அவளை பார்த்ததும் அவள் சாப்பிடல என்று தெரிந்தது. அதான் பன் வாங்கி கொடுத்தேன் என்றான்.
அடுத்த நேர உணவுக்கு நீ என்ன செய்வாய் என்று கேட்டவனை பார்த்த சிறுவன் அதை அந்த நேரம் பார்த்து வேண்டியது தான் என்றான்.
இப்படி உதவி செய்யனும்னு உனக்கு எப்படி தோணினது என்றவனை பார்த்து சிறுவன் ஒரு கேள்வி கேட்டான். உங்களுக்கு இயேசுவை தெரியுமா என்று...
ஆம் என்று தலையசைத்தவனை பார்த்து சிறுவன் சொன்னான், அந்த இயேசு தான் இ்ருக்கிறதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ள சொன்னார். எங்களுக்கு தேவையானதை அவர் ஏதாவது ஒரு வழியில் தந்து உதவுவார். நான் அவரை நம்புகிறேன் என்றான்.
சிறுவனின் பதில் அபிஷேக்கின் மனதை சம்மட்டியால் தாக்கினது போல் உணர்ந்தான். இயேசுவே என்னை மன்னியும் என்று வாய் விட்டு கூறியவன், தம்பி நாளைக்கு காலை பத்து மணிக்கு உன்னை போல ஆதரவு அற்ற சிறுவர்களை எல்லாம் கூட்டி கொண்டு இந்த அட்ரஸ்க்கு வந்து விடு. அங்கு உங்களுக்கு கிறிஸ்துமஸ் வெகுமதி காத்திருக்கிறது என்று