கூறி விட்டு சென்றான்.
காலையில் சில சிறுவர்களை அழைத்து கொண்டு அபிஷேக்கின் வீட்டிற்கு வந்தான் சிறுவன். அவர்களுக்கு உணவும் பரிசும் அளித்து விட்டு இனி அவர்களை தான் படிக்க வைப்பதாகவும், அவர்களுக்கு என்று ஒரு ஆசிரமத்தை ஏற்படுத்தி அவர்களை பராமரித்து கொள்வதாகவும் வாக்கு அளித்தான்.
ஒரு வருடத்திற்கு பிறகு,
அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் அநேக சிறுவர்கள் தங்கி இருந்தார்கள். அவர்களை கவனிப்பதற்காக அநேக ஆட்களை அமர்த்தியிருந்தான் அபிஷேக். அனைவருடைய முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. அவர்களோடு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தன் கைக்குழந்தையோடு வந்தனர் அபிஷேக் ஷீலா தம்பதியினர்.
விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்த இறைமகன் காட்டிய வழியில் நடப்பதே உண்மையான மகிழ்ச்சி என்பதை கண்டு கொண்டான் அபிஷேக்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.