நீ உடனே ஒரு வக்கீலை பார்த்து, சட்டப்படி, என்ன செய்யணுமோ, அதற்கு ஏற்பாடு செய்! நான் எந்த பேப்பரில் வேண்டுமானாலும் இப்போதே கையெழுத்துப் போட்டுத் தருகிறேன்.
ஏன்னா, நீ சந்தோஷமா இருக்கணும், இன்னொருத்தி வாழ்வுக்கு உதவப் போறே, அதற்கு நான் தடையா இருக்கக் கூடாது, எனக்கு நீ செய்த உதவியை மறக்கலே, ஐ லவ் யூடா!
உன் நல்லதுக்காகவே சொல்றேன். நீயும் படித்தவன். நான் ஒண்ணும் கற்பனையா எதையும் சொல்லலே...
விட்டல்! வேணும்னா, நானும் உன்னுடன் வந்து மாளவியிடம் பேசட்டுமா? இரு, ஒரு நிமிஷத்திலே ரெடி ஆயிடறேன்......" தனது திட்டம் சுலபமாகப் பலிக்காது என்று விட்டலுக்கு புரிந்தது!
ரமாவையும் இழந்து, மாளவிகாவும் கிடைக்காமல் போய்விட்டால்..........?
ஆகவே, தனது விவாகரத்து கோரிக்கையை கைவிட தயாரானான்.
" ரமா! நீ வேண்டாம். நானே போய் மாளவிகாவிடம் விசாரித்துக் கொண்டு வருகிறேன்......"
" சரி, அப்படியே, நல்ல வக்கீலா பார்த்து என்னை டைவோர்ஸ் பண்ற பேப்பர்களை ரெடி பண்ணச் சொல்லிடு.........!"
" ரமா! அதற்கு அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன்........."
விட்டால் போதும் என விட்டல் வெளியேறினான்.
அவன் சென்றதும், ரமா வாய்விட்டு சிரித்து மகிழ்ந்து உரக்க, 'ஐ லவ் யூடா!' என கத்தினாள்.
" படவா ராஸ்கல்! என்னை ஏமாற்றப் பார்க்கிறியா? விடுவேனா, உன்னை!"