(Reading time: 20 - 39 minutes)
*Image from https://www.facebook.com/Iyerony

விவரத்தை கூற.... அவர்கள் அந்த ஸ்வாமிஜியின் விவரங்களை கேட்டனர்...

க்ருஹா அவள் விவரங்கள் எடுத்த ப்ளாக் டீடைல்ஸ் தர அதைப் பார்த்த காவலர் நீங்கள் எல்லாம் படித்தவர்கள்தானா என்பது போல் பார்த்தார்...

“ஏம்மா, இப்படி இன்டர்நெட்ல பார்த்தா வீடு வரைக்கும் அவரை வர வச்சீங்க...  இந்த மாதிரி போட்டோ யார் வேணும்னாலும் போடலாமேம்மா...  இப்போ இருக்கற டெக்னாலஜி உபயோகிச்சு ரஜினி சார் கூட பேசறா மாதிரி கூட வீடியோ பண்ணலாம்...  இதையெல்லாம் வச்சு அவரை நம்பி கூப்பிட்டேன்னு சொல்றீங்களே உங்களை என்ன சொல்ல...”

“சார் இப்படி கடவுள் பேரை சொல்லி ஏமாத்துவாங்கன்னு நினைக்கவே இல்லை சார்....”

“இப்போ நடக்கற முக்கால்வாசி ஃபிராடுத்தனம் கடவுள் பேரை சொல்லித்தான் நடக்குதும்மா... சார் நீங்க ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுங்க... நான் விசாரிக்கறேன்... இந்த போன் நம்பருக்கு பண்ணிப் பார்த்தீங்களா....”

“காலைலேர்ந்து பண்ணிட்டு இருக்கோம் சார்... switch off அப்படின்னே வருது...”

“அவ்ளோதான் ஆள் அப்ஸ்கான்ட் ஆகி இருப்பான்... ஏன் சார் இத்தனை படிச்சிருக்கீங்க...  இப்படி ஏமாந்து போவீங்களா...  இப்போ சாமியார்ங்கற பேருல சல்லித்தனம் பண்ணுறவங்கதான் அதிகமா இருக்காங்க...  நாளுக்கு ஒரு  போலி சாமியார் உருவாகிட்டு வர்றாங்க...  மக்களும் அவங்க பின்னாடித் தான் போறாங்க...

பெத்தவங்க, கூடப் பொறந்தவங்க இப்படி யாரையும் நம்பறதில்லை... ஆனா குடும்ப விஷயம், பண விஷயம் இப்படி மொத்தத்தையும் மூணாவது மனுஷனான இந்த மாதிரி சாமியார்களை நம்பி ஏமாந்து சொல்லுறது...

ஆதே மாதிரி அவங்களுக்கு ஏகப்பட்ட பணத்தை அள்ளி விடறது... எந்த சாமியாரானும் வறுமைல இருக்காங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்....  உங்களை மாதிரி ஆளுங்களோட பணத்துல அவங்க ஊருல இருக்கற இடத்தையெல்லாம் வளைச்சு போட்டு வாங்கி கார்பொரேட் கம்பெனி மாதிரி நடத்திட்டு இருக்காங்க...  என்ன சொல்லி என்ன பண்ண... எத்தனை பேர் ஏமாந்தாலும் புதுசா உங்களை மாதிரி ஏமாற ஆளுங்க இருக்கறவரை, போலி சாமியார்களும் வந்துட்டேதான் இருப்பாங்க....

நாம மத்தவங்களுக்கு நல்லது பண்ணினா நமக்கும் நல்லதே நடக்கும்,,, கோவிலுக்கு போங்க கடவுளை நேரடியா கும்புடுங்க...  உங்களுக்கும் அவருக்கும் இடையில மீடியேட்டர் எதுக்கு....  கடவுளை எதுக்கு கும்பிடறோம்... அவர் நல்லது பண்ணுவார் அப்படின்னுதானே...  அப்பறம் எதுக்கு இவங்க நடுவுல...

இந்த மாதிரி ஆளுங்களை நம்பி நாம ஏமாற வேண்டியது... அப்பறம் கடவுளைத் திட்ட

7 comments

  • [quote name=&quot;SriJayanthi&quot;]Thanks for your comments Ravai Sir... Happy new year to you and your family[/quote]<br />Wish you a very happy New Year, dear Jayalakshmi madam!
  • Thanks for your comments and wishes AdharvJo... Wishing you the same... Ennadhu varadhu Punch vidanumaa... Roba yethirpaarkkareenga... varadhukku pesave kiru vaaippu kodukka maattaa... Idhula adithadiyaa... vaaipe illai... <br /><br />hmm nijathil sila perai paarththa baathippu intha kathai.... saamiyaargalai nambi nalladhu nadanthathai vida kudumbathil izhanthathuthaan adhigamaaga irukku... neenga sonnathu romba correct... blind followers... ippo adhigamaa irukkaanga...
  • How foolish 😱😱 gruhalakshmi kk heart attack varadhudhu periya vishyam than nattamai...Pavam mr. varadhu....punch vidama punch dialogue adikurare ivalo cool ah :grin: Subbu patti escape aguradhu super. 😂😂 and her counter ls semma 😁😁<br />Ivanga thirndha janmam facepalm ivalo blind beliefs irukka kudadhu..... Idhuvum ipppo oru trend nu sollura alavukku irukku :sad: valuable social message ma'am 👏👏👏👏 :hatsoff: hope people really stay away from all these scams. <br /><br />Thank you for the story.<br /><br />Happy, healthy and prosperous new year to you and your family 🎊🎊
  • மிடில் க்ளாஸ் குடும்பத் தலைவிகளின் மனோபலவீனத்தை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பது, பிரமாதம்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.