அது எப்படி தங்கையின் நிச்சியத்துக்கு அவள் வராமல் போவாள்?
'நிஜமா' என்று அழுத்தமாய் சொன்னாள் கவிதா. வேணும்னா நாங்க தங்கி இருந்த ரூம் 204லே போய் செக் பண்ணி பாருங்க.
நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் மேடையை விட்டு இறங்கினான் ஸ்ரீராம்.
அந்த அரங்கை விட்டு வெளியே வந்து, மாடிப்படி ஏறினான். அறை எண் 204ல். யாருமில்லை. ஹோட்டல் முழுவதும் இரண்டு முறை வட்டமடித்தாகி விட்டது. கண்ணில் படவில்லை அவள்.
தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமா?
நிஜமாகவே வரவில்லையா அவள்? அவள் வீட்டுக்கு போய் பார்க்கலாமா? அவன் யோசித்தபடியே நின்ற நொடியில்...
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம் இணைவோம்
இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா.
அவன் பின்னாலிருந்து இரண்டு வளைக்கரங்கள் அவனை சேர்த்து அணைத்துக்கொண்டன. அதற்கு மேல் அங்கே வார்த்தைகள் எதுவுமே தேவையாக இருக்கவில்லை.
போதும் நடந்தது எல்லாம் போதும். இனி எந்த நிலையிலும் அவளை இழந்து விடக்கூடாது என்ற தவிப்புடனும், உறுதியுடனும் அவன் கைகள் அவளை அடைக்காத்துக்கொள்ள, அவனுக்குள்ளே கரைந்தே போய்விட எத்தனித்தவளாய் அவனை தன்னோடு இறுக்கிகொண்டாள் ஸ்ரீரஞ்சனி.
Manathai Thotta ragangal - 02 - Kathale en kathale
{kunena_discuss:748}