அப்ப ஊர்ல உள்ளவரை அடிச்சது இந்தப் புலியா?
அதெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி. பயப்படாம தூங்குங்க.
என்ன இவரு? அந்தப் புலி தான் இதுவான்னு கேட்டா மழுப்புறாரே..பயந்துகொண்டே படி ஏறினேன்.
வாங்க! உங்க அறையில் நான் கொண்டு போய் விடுறேன்.
இல்ல சார் நான் போய்டுவேன். நீங்க தூங்குங்க.
இன்னிக்கு நடந்த கூத்துல, பயங்கர அசதியா இருக்கு? தூக்கமா வருது. ஹ்ம்ம்
மறுநாள் காலை...கதவைத் திறந்து அஞ்சலி வெளியே வர,
அஞ்சலியின் அக்கா, "என்னடி? எல்லாம் நல்லபடியா நடந்ததா?"
அஞ்சலி சலிப்புடன் "என்னக்கா? என்ன நல்லபடியா நடந்தது? நல்லபடியா தூங்கக்கூட முடியல!”
என்னடி? என்னாச்சு? ஏன் சலிச்சுக்குற? அக்கா கேட்க,
நான் என்னத்தைச் சொல்ல, "இவர் புத்தகப் புழுன்னு சொன்னங்க சரி. அதுக்காக முதலிரவு அறையில் கூடவா புத்தகம் படிக்கணும். ஏதோ "புலி வேட்டைன்னு" ஒரு நாவலைப் படிச்சிட்டு, கரடி, புலி, அது துரத்துது, ஸ்டூல், பால்கனி , மருதையன் " இன்னும் என்ன என்னமோ கனாக் கண்டு உளறிட்டு நல்லாத் தூங்கிட்டாருக்கா!”
என்னது "புலியை விரட்டுற மாதிரி கனவா? கனவுல கூட புலிய விரட்டுற உன் வீட்டுகாரர் சூரப்புலி தான்டி!
பின்னாடியே, பாரி எழுந்து வரவும், அக்கா நகர்ந்து சென்றாள்.
வருண் வந்தான், “என்ன மச்சான், எதாவது வேணுமா ?"
இப்போதைக்கு எதுவும் வேணாம் வருண், பல் தேச்சதுக்கப்புறம் காபி வேணும்.
சரி மச்சான்.
அக்கா உனக்கும் மச்சானுக்கும் ஒரு மூணு நாளுக்குத் தேவையான துணிமணி எடுத்து வச்சுக்க. உங்களுக்குத் தேனிலவு ட்ரிப் அப்பா ஏற்பாடு பண்ணி இருக்காங்க..
எந்த ஊர் ஊட்டியா கொடைக்கானலா ?
மேகமலை!
{kunena_discuss:785}