கதையாய் கவிதையாய்
கண் பாவத்தில் உணர்த்தினாள்
கற்சிலையாய் அமர்ந்திருந்தான்
கண்ணிமைக்கவும் மறந்திருந்தான் (19)
சிரித்தன அவள் கண்கள்
சில்லென நனைந்தான் சாரலில்
துன்பம் தோய்த்த நயனங்கள்
துவண்டு துடித்தான் அவள் வலியில் (20)
அவள் விழிகளின் தாளம்
இவன் இதயத்தில் நர்த்தனம்
கண்வலையில் சிக்கிவிட்டான்
கன்னி இதயத்தில் விழுந்துவிட்டான் (21)
அத்தையின் விருப்பம் ஏற்று வந்தான்
அபூர்வா கருத்துகள் கேட்டு சிலிர்த்தான்
அவன் அளித்தான் பெரிய தொகை
ஆராய்ச்சிக்கு உதவ நன்கொடை (22)
அவன் திறமையும் ஆளுமையும்
அவளுள் பிரமிப்பு எப்பொழுதும்
நன்றி உறைக்கவே நிமிர்ந்தாள்
நிலம் நோக்கி இமை சரித்தாள் (23)
ஏனோ அவனை கண்டதும்
எழுந்த பிராவகம் என்ன காரணம் (24)
ஆண்டுகள் உருண்டோட
ஆராய்ச்சியில் அவள் மூழ்க
இவன் கவனம் தொழிலில் செல்ல
இதயங்கள் காதலை ரகசியமாய் அடைகாக்க (25)
சித்த மருந்தும் ஆயுர்வேதமும்
பாட்டி சொல்லும் கைமருத்துவமும்
மலைகளில் வாழும் பெருங்குடியினர்
மூலிகை கொண்டே நோய் தீர்ப்பதும் (26)
பாரதத்தின் பாரம்பரியத்தில் இருந்து
பக்கவிளைவில்லா ஓர் மருந்து
புற்று நோயையை வேரோடு களையவும்
பாதக மருந்துகளின் தாக்கம் தகர்க்கவும் (27)
அகிலமே இதை ஏற்க வேண்டும்
அதற்கு தக்க ஆதாரம் காட்ட வேண்டும்
சோதனை எலிகளில் வெற்றி முழு சதவீதம்
சாதிக்க தேவை மனித உடலில் நிரூபணம் (28)
விளைவு வேறாகிவிட்டால்
உயிர் கொலை அபாயம்
விடை கண்டு கொண்டாள்
அவள் உடலில் சோதனை படலம் (29)
தாக்கும் அணுக்கள்
தீவிர கார்சினோஜன்கள்
தன்னுடலில் செலுத்திக் கொண்டாள்
தேகத்தை மாபெரும் வேள்விக்கு அர்பணித்தாள் (30)
பரவியது புற்று
படிப்படியாய் அரித்தது
புத்தம் புது மலர் சருகானாள்
பாதக மருந்தையும் ஏற்று நலிவுற்றாள் (31)
அவள் எதிர்பாரா வண்ணம்
அவளில் பாதிப்பு அதிகம்
வேதனையிலும் தீர்க்கம்
வெகுஅருகில் லட்சிய மார்க்கம் (32)
அந்தோ ஏற்பட்டது தடங்கல்
அறிவித்தனர் அவள் சகாக்கள் (33)
உன் மருந்து குணமாக்கும்
என இல்லை ஏதும் சாட்சி
உன் உறவு பொறுபேற்கும்
என்றால் செய்யலாம் இம்முயற்சி (34)
அவள் அன்னையோ துடித்தார்
அவள் செய்தது தவறென கடிந்தார்
சோதனைகள் ஏற்க மறுத்தார்
சேய் பிழைக்க வழி தேடி தவித்தார் (35)
நிறைவேறாதோ என் தவம்
நிராசை அவள் கண்களில்
காய்ந்த சருகாய் அவள் தேகம்
காலன் அவளின் வெகு அருகில (36)