(Reading time: 10 - 20 minutes)

"வீ ஆர் ஹாப்பி டு இன்பார்ம் யூ போத் ஆர் செலக்டட்..." என்றார் செலவகணபதி 

எனக்குள் உற்சாகம் தொற்றும் முன் "இட் இஸ் பாக்டோர் என்ட்ரி அதனால் ஷோ அஸ் யூர் கிராட்டிடுட் " என்றார்.

நான் முழிக்க அவர் வரும் திங்களுக்குள் ஒன்றரை லட்சம் கொடுங்கள் யூ வில் கெட் யுவர் ஆப்பர் யுவர் ஹான்ட் என்றார். 

தொண்டைக்குள் துக்கம் அடைத்தது.ஆசை மனதுக்குள் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது,தடுக்க முடியவில்லை.

வெளியே வந்தோம் இருவரும்.அவள் பெயர் திவ்யா என்று தெரிந்துக்கொண்டேன்.அவள் பரபரப்பாகி இன்னமும் நடுக்கத்தோடு இருந்தாள்.

"வீட்லே பணம் அவளோ இருந்தாள் நான் ஏன் வேலைக்கு வரேன் " என்று கண்களில் கண்ணீரோடு கேட்டாள்.

புலம்பலாக அவள் நிலைமை சொன்னாள். தந்தை இல்லை, காதலன் கல்யாணம் செய்துவிட்டு மறைந்து போனான்.எங்கே போனானோ ? எப்படி போனான் இந்த அழகியை விட்டு.

"நான் அவங்க கிட்டே பேசி பார்க்கட்டா??" என்று கேட்டாள் 

நான், "உங்க இஷ்டம் என்றேன் "

மற்ற இருவர் முகங்களும் எங்களை போலவே உறைந்து வெளியே வந்தது.

நான் அந்த பில்டிங் விட்டு வெளியே வரும்போது மற்ற இருவரும் "நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணலாம் பாஸ் " என்று சொல்லிக்கொண்டு விடை பெற்றுகொண்டிருந்தனர்.

எனக்குள் போட்டி குறைந்தது என்ற எண்ணம் தான் மேலோங்கியது.

சிலபல நேரம் காத்திருந்தேன். அவள் வரவில்லை.பஸ்நிறுத்ததிற்கு நடக்க தொடங்கினேன். அந்த ரோட்டில் ஒரு நியான் லாம்ப் போஸ்ட் வீணாக என் துணைக்கு.

வெளிச்சம் மனதுக்குள் கேள்விகளை குடைந்தது."முடியாதுனு சொன்னா என்ன பண்ணுவாங்க ?,போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தா ? அப்பா மட்டும் எப்படி ஏற்பாடு செய்வார் ? அந்த பெண் பாவமில்லே ?? அடுத்த இண்டர்வியூக்கு போகலாம்...

பஸ் நிறுத்தத்தில் பஸ் வந்தது. ஏறினேன்.கிளம்ப எத்தனித்த பஸ் நின்றது.பின் பக்க ஏற்றத்தில் அவள் ஏறினாள். காலியான என் சீட்டிற்கு அடுத்த சீட்டில் அமர்ந்தாள். கண்கள் வீங்கியிருந்தது. 

நான் பின் திரும்பி "என்ன சொன்னாங்க" என்று கேட்டேன்.

அவள் முகம் மூடி குலுங்கி குலுங்கி அழுதாள். அவன் என்னை ஒரு நாள் நைட்க்கு கூப்பிடுறான் என்றாள்.

நான் "சரி விடுங்க, அடுத்த வேலை தேடலாம் " என்றேன். முன்பக்கம் திரும்பிக்கொண்டேன்.

அவன் கேட்டதில் தவறில்லை போல தான் எனக்கும் தோணிற்று. அதிர்ந்தேன் என் எண்ணத்தில், ஏன் அப்படி எனக்கு தோன்றியது? எனக்கும் வீட்டில் தங்கை உண்டு.அவளை அப்படி யாராவது கேட்டால் சும்மா விடுவேனா ? இல்லை அவளை இந்த நிலைமைக்கு தான் விடுவேனா ? என்று கேட்டது மனம்.

இதே போல் இன்னமும் நடந்தால் என் தங்கை வேலைக்கு போகும் நிலைமை என் வீட்டிற்கும் வரும். 

கிண்டி வந்தது.அவள் இறங்கினாள்.ஏனோ அவள் பாதுகாப்பு முக்கியம் போல் தோன்றியது.

நானும் இறங்கினேன். அவள் ஆட்டோவிற்கு எதிர்பார்த்து நின்றாள்.

"இங்க தான் உங்க வீடா ?" என்று கேட்டேன்.

"இல்லை வில்லிவாக்கம் " என்றாள் 

"அப்போ இங்க எங்க ?" என்றேன் 

"கையில் இருக்கும் காகிதம் கொடுத்தாள், இந்த அட்ரெஸ்க்கு போக போறேன் "  என்றாள் 

பார்த்தேன்.செல்வகணபதியின் வீட்டு அட்ரெஸ் இருந்தது.சைதாபேட் என்று இருந்தது. உயிரை பிடுங்கி எறிந்தது போல் வலித்தது.

"என்னங்க இது? பொம்பளையா நீங்க?" என்றேன் 

"அது கேட்க உனக்கென்ன துப்பிருக்கு, வெறிச்சி வெறிச்சி பார்த்தவன் தானே நீயும் " என்று சொல்லிக்கொண்டு ஆட்டோவை நிறுத்தி ஏறினாள். நானும் கூட ஏறிக்கொண்டேன் அவளை தடுத்து நிறுத்த.

"எதுக்கு இப்போ என்னோட வரீங்க? எறங்குங்க " கோபமாக அவள் 

"வேண்டாங்க இன்னுமும் கொஞ்சம் தேடினால் நல்ல வேலை கிடைக்கும் " 

"நீ யாருயா என்னை வழிநடத்த ? என் அப்பனா !!"

ஆட்டோக்காரன் "மேடம் லக்ஷ்மன்பதி அபார்ட்மெண்ட்  வந்த்ருச்சு " என்றான் 

"சரி " என்று சொல்லிக்கொண்டே என்னை வெளியே தள்ளி அவளும் இறங்கிக்கொண்டாள்.

இருவரும் வாதாடிகொண்டே எண் 8டி அடைந்து விட்டோம். காலிங்க பெல் அடித்தும் ஆயிற்று.

 திவ்யா வெறிக்கொண்ட நாய் போல் மூச்சு வாங்கி கொண்டு கதவு திறந்ததும் கையில் இருந்த பைல்கொண்டு அவன் தலையில் அடித்தாள்.

ஏங்க ஏங்க என்று சொல்லிக்கொண்டே நான் தடுக்க அவள் கையை பிடிக்க அவள் என் ஆண்குறியில் எட்டி உதைத்தாள்.

என் சர்டிபிகேட் பைல் கையில் பிடித்துக்கொண்டே அழுகையுடன் அந்த வீட்டின் ஹாலில் விழுந்தேன்.

"நாயே யார ஒரு நைட்க்கு கூபிட்றே ??, என்னை பார்த்தா எப்பிடிடா தோணுது உங்களுக்கு எல்லாம்?" என்று சொல்லிக்கொண்டே கையில் கிடைத்த தொடப்பத்தை வைத்து அவனை அடித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.