(Reading time: 24 - 47 minutes)

2017 போட்டி சிறுகதை 26 - மையல் பாதி உன்னோடு - அன்னா ஸ்வீட்டி [கிறிஸ்துமஸ் சிறப்பு கதை]

This is entry #26 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - அன்னா ஸ்வீட்டி

Heart

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது....

ந்த திருமணத்தை நிறுத்த முடியாத தன் கையாலாகதனத்தை நினைக்கையில் தன்ஷியாவிற்கு இன்னுமாய் அழுகை கொப்பளிக்கிறதென்றால்….அடுத்தவர் முன்பு சபையில் வைத்து அழுவது எத்தனை அவமானம் என்ற நினைவு இவள் அழுகையை அடக்கி வைக்கிறது. கூடவே அப்பா அம்மாவின் நினைவு வேறு….

முடிந்தவரை முயன்று கண்ணீரை இமைகளுக்குள் ஒழித்தாள்.

அதே நடிப்பை இதோ திருமணம் முடிந்து ரிஷப்ஷன் நடந்து இன்ன பிற எல்லாம் செய்து முடிக்கும் வரை தொடர முடிந்தவளுக்கு….. இரவில் தனியறைக்குள் அவனை அதான் அவள கல்யாணம் செய்துறுக்கானே அந்த ஷெஷாங்கை சந்திக்கும் போது தொடர முடியவில்லை…..

அவளுக்குள் பயமும் கோபமும்  நீ பாதி நான் பாதி என .பங்கு கேட்டு  டூயட் பாடின என்றால்..…. இரண்டையும் காட்ட முடியாமல் மூன்றவதாய் அழுது வைத்தாள் அவள்.

மேடையில் ஒரே ஈஈஈஈஈ போஸில் எல்லோரிடமும் எக்‌ஸைட்டட் ஸ்டேட் எக்ஸ்‌ப்ரெஷன் கொடுத்து கொண்டிருந்த அவனும் இப்போது வேறு முகம் காண்பித்தான். ஆம் இவளை ஒரு பார்வை பார்த்தவன் அடுத்து இவளை கொஞ்சமும் சட்டை செய்யாது தன்பாட்டுக்கு தன் சட்டை பட்டனை கழற்றியபடியே அங்கிருந்த அடுத்த அறைக்குள் நகர்ந்து சென்றுவிட்டான்.

அடுத்து வந்த ஒரு வாரமும் இதே தொடர….அதாவது கல்யாணத்திற்கென நடந்த விருந்து உபசரிப்புகளில்  இவள் அழாதவாறு காண்பித்துக் கொள்வதும் அவன் ஈஈஈஈஈ போஸ் கொடுப்பதும்…. இரவில் இரண்டு பேரும் என்னவென்று கூட கேட்டுக் கொள்ளாமல் அடுத்த அடுத்த அறைக்குள் புகுந்து கொள்வதும் நடந்தேற….அன்று முதன் முறையாக அவனிடம் பேசும் நிலை வந்தது தன்ஷிக்கு….

அன்று அவனது அக்கா வீட்டில் இவர்களுக்கு விருந்து….. மதிய சாப்பாடு தடபுடலாய் முடிந்திருக்க……அவனது அக்கா அதுராவுக்கு இரண்டு குழந்தைகள்……அதில் இரண்டாவது குட்டிக்கு இப்போதுதான் மூன்று மாசம்…..அந்த குழந்தை தூக்கத்திற்கு அழ…… இவனது அக்கா அதுரா குழந்தையுடன் மாடியிலிருந்த அறைக்கு சென்றிருந்தாள்.

அதுராவின் கணவரும் எதோ ஃபோன் வர, எழுந்து வெளியே செல்ல….. இப்போது அதுராவின் மூத்த குழந்தை மூன்று வயது ஷாலு கையில் ஒரு ரசகுல்லா டின்னுடன் தன் தாய் மாமனிடம் வந்து நின்றது…

ரசகுல்லா வேண்டுமாம்….அந்த ஸ்டீல் டின்னை திறந்து கேட்டது அந்த குட்டி….

டைனிங் டேபிளின் இந்த புற சேரில் அமர்ந்து தன்ஷி பார்த்துக் கொண்டிருக்க அந்த புறம் நின்று தன் மருமகளிடம் கொஞ்சி கொஞ்சி பேசியபடி அந்த டின்னின் மேல் மூடியை கத்தி கொண்டு வெட்டி திறந்து கொண்டிருந்தான் அவன்….

ஒரு கட்டத்தில் அவனது கை பக்கத்தில் நின்றிருந்த ஷாலு குட்டி உற்சாக மிகுதியில் சட்டென  அவன் வலக் கையைப் பிடித்து ஆட்டியபடியே குதித்துவிட….எதிர்பாரா இந்த ஆட்டுதலில், அவன் கையிலிருந்த கத்தி ஆட்காட்டி விரலை ஒரு பக்கமாக வெட்டி சொருகி நின்றதென்றால் அடுத்த விரலில் அந்த டின் மூடி சொருகி இருந்தது….

ரத்தம் இன்னும் வந்திருக்கவில்லை என்பதால் முதல் நொடி தன்ஷிக்கு எதுவும் புரியவில்லை…..அவன்தான் ஒரு சின்ன முகசுளிப்போடானா ஸ்ஸ்….க்குப் பின் எதையும் காட்டிக் கொள்ளவில்லையே….

ஆனால் குட்டி இன்னுமே புரியாமல் அவன் கையை இன்னுமாய் ஆட்டியபடி குதிக்க…..அவளை கட்டுப் படுத்தவென தன் வலபக்கம் நின்ற குழந்தையை இடக்கையால் எக்கி பிடித்து சமாளிக்க முயன்றபடி  தன் விரலை அவன் டின்னிலிருந்தும் கத்தியிலிருந்தும் எடுக்க முயல….

இதில் விரல் ஏடாகூடமாய் கிழிபட்டுக் கொண்டு ரத்தம் பீச்சி அடிக்க…. அப்போதுதான் என்ன நடந்து கொண்டிருக்கிறது என புரிகிறது தன்ஷிக்கு….

அவசரமாய் எழுந்தவள் அடுத்து என்ன செய்யவென புரியாமல் அவன் முகம் பார்த்து பதற்றமாய் விழித்தாள்..… ஆனால் அதெல்லாம் ஒரு நொடிதான்….மீண்டுமாய் அவன் கையிலிருந்து வரும் ரத்தத்தைப் பார்த்ததும்……

என்னதான் அவன் மீது இவளுக்கு வெறுப்பு என்று இருக்கட்டுமே…..இந்த ஏழு நாள் இவள் முன் அவன் நடந்து கொண்ட முறையாலோ இல்லை எந்த உணர்ச்சியையும் வெகு நாளாக இழுத்து பிடித்து வைத்துக் கொண்டு அலைய முடியாது என்பதால் அவன் மீதிருக்கும் கோபம் குறைந்திருக்கிறதோ? அதனாலோ??

ஓடிப் போய் அவன் விரலைப் பற்றி கத்தியிலிருந்து எடுத்துவிட முனைந்தாள்…

இதற்குள் அவன்  “ஹேய் ஒன்னுமில்ல தனு…. நான் பார்த்துப்பேன் ….நீ ஷாலுவ மட்டும் பார்த்துக்கோ…” என மறுத்தான்…

 ரத்தத்தை பார்க்கவும் வீரீட்ட படி அவன் கையை இன்னுமாய் அப்பிக் கொண்டிருந்த குழந்தையை இப்போது அள்ளினாள் அவள்….

“நீங்க கண்டிப்பா ஒரு டிடி போட்றுங்க….” அதுதான் இவள் முதன் முதலாக அவனிடம் பேசிய வார்த்தை. சின்னதாய் சிரித்தபடி தலையாட்டி வைத்தான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.