(Reading time: 36 - 72 minutes)

வர் தான் இவளை காப்பாற்றி, ஒரு அனாதை இல்லப் பள்ளியில் சேர்த்து இருக்கிறார். ஆக, என் மாமா மூலம் அம்மா கேட்ட  உதவி இவளை கிட்டாமல், காவல் துறை அதிகாரி மூலம் கிட்டி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.

“ஒரு கவர்மென்ட் ஸ்கூல்ல வேலை பார்த்துகிட்டே  கஷ்டபடுறவங்களுக்கு ஃப்ரீ ட்யூஷன், கோச்சிங் க்ளாஸ் எல்லாம் எடுத்துகிட்டு இருக்கேன்! ஹச். எம். தான் எனக்கு ரோல் மாடல்!”

என்றாள்!

என்றோ தூவப்பட்ட  விதை... மரமாகி.... அதுவும் விதைகளை சுமக்கும் கனியை ஏந்தி நிற்கிறதே!

பின் நிறைய பேசினோம். என் எதிர்காலத்தை பற்றி கேட்டாள்.

“உனக்கு தான் எல்லாம் பொண்ணுங்க க்யூவில் நிப்பாங்களே!” - என்றதும் ஜெஸியின் நினைவு! முட்டை கிடைத்ததை அவளிடம் சொல்ல மனம் துடித்தது.

“எனக்காக க்யூ நிக்கிறது என்னவோ உண்மை தான்! ஆனா, ஜெஸின்னு ஒரே ஒரு பொண்ணு தான் அந்த க்யூல!”, என்றேன்.

“இங்க என்ன சொல்லுதாம்... ஜெஸி ஜெஸின்னு தானே!”, நான் நினைத்தை அப்படியே சொல்கிறாளே வியப்புடன் பார்க்க,

“நான் வேற நீ வேறயா?? அவங்களுக்கு கால் போடு! பேசலாம்”, என்றாள் வெகு சாதாரணமாக!

எங்களுக்குள் இருக்கும் அன்பின் தன்மை விளங்கி விட்டது! சிலரால் மட்டும் தான்  அன்பை நட்பு, காதல் என்று உறவு வரைமுறைக்குள்ளும் அடக்க முடியாத.. எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத  சம்பூரண அன்பாக கொடுக்க முடியும்!

அந்த சம்பூரண அன்பை பகிர்வதில் நான் வேறு.. அவள் வேறு அல்ல!!!

இப்படி ஒரு அன்பு உருவாக காரணமான என் அன்னை... எங்கள் இருவர் வாழ்விற்கும் தூண்டுகோல்! அவர் எங்கள் மனதில் போட்ட விதை... இன்று பலருக்கும் நல்லது செய்ய வைத்திருக்கிறது!

விதைத்தவர் மறைந்தாலும், விதைத்தது பல தலைமுறைக்கும் பரிமாறப்படும்!!! எனவே,

நல்லதை நினைப்போம்! நல்லதை விதைப்போம்!!!

This is entry #149 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - உஷா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.