“நல்லா இருக்காங்க பெரியம்மா” என காமாட்சியிடம் பதில் சொன்னவன்,
“வாசனை செமையா இருக்கு அண்ணி, எனக்கு பிடிச்ச வடகறி தானே?” என்று துளசியை பார்த்துக் கேட்டான்.
துளசி உடனே பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்...
ஒரு சில வினாடிகள் சென்ற பின்பும் அவள் அமைதியாகவே இருக்கவே, சரத் திரும்பி மனைவியை பார்த்தான்.
அவனின் பார்வையில் என்ன புரிந்துக் கொண்டாளோ,
“ம்ம்ம்... ஆமாம்....” என்று இயந்திரக் கதியில் பதில் சொன்னாள் துளசி.
“சூப்பர் அண்ணி! நான் வருவேன்னு தெரிஞ்சு, எனக்கு பிடிச்சதை கரக்ட்டா செஞ்சிருக்கீங்களே, உங்களுக்கு நிகர் நீங்களே தான்.... உங்க இட்லி, தோசை அண்ட் வடகறி காம்பினேஷன் போல வருமா...?”
உதய் தன் பாட்டில் பேசிக் கொண்டே போக, துளசி அமைதியாக அவனுக்கு ஒரு தட்டை எடுத்து வைத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்ம்..” என்று சொல்லி விட்டு, காமாட்சியின் கையில் இருந்த சாஹித்யாவை மெல்ல தூக்கினாள்.
“வாங்க செல்லம்... நாம போய் கொஞ்சம் நேரம் விளையாடுவோம்...” என்றவள்... காமாட்சியிடம்,
“நைன் ஓ க்ளாக் மாதிரி சாப்பிட வரேன் அத்தை...” என்று சொல்லிவிட்டு உதயை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாள்...