“ஒரு இருநூறு இருநூற்றி ஐம்பது அடிக்குள்ள ரீச் ஆயிருவோம் வ்ருதுஷ்..”என்ற எழில்,”தண்ணீர் பாட்டில் எடுத்து வெச்சுக்கிட்டீங்களா..??”,என்று கேட்டான்..
“ஆச்சு எழில்.. மூணு பாட்டில் தான் இருக்கு.. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்..”,என்றாள் க்ரியா..
“அங்க ஒரு குளம் இருந்துச்சு.. தண்ணீர் வேணும்னா அங்க எடுத்துக்கலாம்.. இப்போதைக்கு மழை நீரே போதும்..”,என்றான் லேசாகத் தூறிக் கொண்டிருந்த மழையை இரசித்துக் கொண்டபடியே..
பேசியபடியே அந்த கிராமத்தை அடைந்தவர்கள் ஒழுகாமல் இருந்த ஒரு பெரிய திண்ணையில் அமர்ந்தனர்..
இரவு மணி பத்தை கடக்க மழை நின்று வானின் மகள் வானில் ஜொலிக்கத் துவங்கினாள்..
அன்று பெளர்ணமி ஆனதால் நட்சத்திரங்களின் ஒளியை விட மிஸ் வான்மகளே அன்றைய நட்சித்திரமாய் ஒளி வீசிக்கொன்டிருந்தாள்..
தூரத்தில் ஒலித்துக் கொண்டிருந்த காட்டின் இரவரசன் நரியின் குரலும் இளவரசி ஆந்தையின் குரலும் அந்த வனம் உயிர் கொண்டுதுள்ளது என்பதை பறைசாற்றியது..
தென்றலானது ஒவ்வொருவரின் மேனியையும் வருடி குளிரைப் பரப்பிவிட்டுச் சென்றது..
வீடுகளைச் சுற்றியிருந்த மரங்களிலிருந்து மணமணக்கும் வண்ண வண்ண மலர்கள் நேர் கோட்டில் யாரையோ வரவேற்பது போல் தூவிக்கிடந்தது..
திண்ணையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் சோர்வாக படுத்தபடியே பேசிக் கொண்டிருந்தனர்..
செமியாக் குளிருது என்று கைகளைத் தேய்த்துக் கொண்டபடியே திண்ணையை விட்டு கீழே இறங்கிய தியா,”நான் கொஞ்சம் நடக்கறேன்..நடந்தா குளிர் கொஞ்சம் தெரியாது..”,என்றாள்..
“தனியா நடக்க வேணாம் தியா..நானும் வரேன்..”,என்று எழுந்த ரிக்கி தனது வலதுபக்கமாக சற்று தூரத்திலிருந்து நடந்து வந்து கொண்டிருந்த உருவங்களைக் கண்டு சம் பீப்பிள் ஆர் கம்மிங் என்று சிறிது சத்தமாக முணுமுணுத்தான்..
சட்டென்று அலெர்ட் ஆன எழிலும் வ்ருதுஷும் கத்தியை எடுத்தனர் என்றாள் தியா பாதுகாப்பிற்காக தனது ஹீல்ஸை கழட்ட ரெடியானாள்..
அவர்களை நெருங்கி வந்த நான்கு முகங்களையும் கண்டவர்கள்.........(ஹி ஹி.. அடுத்த எபி’ல சொல்றேன்..)
ஹாய் நண்பர்களே..
அனைவருக்கும் விஜயதசமி மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் (belated wishes..:P)..
இன்றைய எபி’யை எப்படீன்னு படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..
எழுத்துப் பிழைகள் இருந்தால் கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுங்கள் பா.. இரண்டு மூன்று நாட்களில் எக்ஸாம் வருவதால் ஸ்பெல் செக் பண்ண நேரம் இல்லை..
கதையில் flow மிஸ்ஸாவது போலிருந்தாலும் குறிப்பிடவும்..
நன்றி..
வியூகம் வகுக்கலாம்...
{kunena_discuss:1111}