அதை ஆதித் வாங்க கை நீட்டும் போது அவனின் அருகில் சென்ற ஜானகி யார் இந்த பெண் ஆதித், ரொம்ப லச்சணமா இருக்காளே! என்று அழ்குநிலாவை பார்த்து கேட்டார் .
திடீர் என்று அங்கு தன அம்மாவை எதிர்பார்க்காத ஆதித் அழகுநிலாவின் கையில் இருந்த அவனுடைய கோர்ட்டை வெடுக்கெண்டு பறித்து ஜானகியின் ஆர்வமான் பார்வையில், அச்சோ.... என்று நொந்தவன் அம்மா கற்பனையை பறக்கவிடாதீங்க அது ஜஸ்ட் எனக்கு தெரிந்த பொண்ணுமட்டும் தான். அவளுக்கு ட்ரெஸ் வாங்கத்தான் கூடவந்தேன் என்று சொதப்பலாக பதில் அளித்தான்.
அழகுநிலாவிற்கு ஜானகியை பார்த்தவுடனே, எப்பா... இவன் அம்மா கூட எவ்வளவு அழகா இருக்காங்க. பார்த்தவுடனே மரியாதையுடன் அந்த வயதிலும் இளமை பொலிவோடு இருக்கிறார்கள் என்று மனதினுள் நினைத்தவள் ஆதித்தின் சொதப்பலை கவனிக்கத்தவறி தன்னை போய் அழகுன்னு சொல்றாங்களே! நம்மளை கிண்டல் பண்றாங்களோ? என்று யோசனையுடன் இருந்தவள் ஆதித்தின் வார்த்தைகளை கவனிக்க மறந்தாள்.
தன மகனின் தடுமாற்றமான வார்த்தையை பார்த்ததும் ஜானகி எவ்வளவு கம்பீரமான ஆணையும் மனம் கவர்ந்தவள் பக்கத்தில் இருந்தால் அசடு ஆகிடுறாங்க என்று சரியாக் இருவரையும் தவறாக நினைத்தாள். தன மகனை மேலும் அவர்களுக்குள் உள்ள உறவை பற்றி கேட்டு சங்கடப்பட வைக்கக்கூடாது. எப்படியென்றாலும் ஓர் நாள் என்னிடம் சொல்லித்தானே ஆகவேண்டும் என்ற நினைப்புடன் அழகுநிலாவின் கைபிடித்து உன் பேர் என்னமா..? நான் ஆதித்தோட அம்மா என்று பேச்சை அழகுநிலாவிடம் வளர்த்தாள்.
ஏனோ அழகுநிலாவிற்கு பார்த்தவுடனேயே ஜானகியை பிடித்துவிட்டது. கழுத்தில் போட்டிருந்த தாலிக்கொடியின் முகப்பிலும், காதில் இருந்த எட்டுக்கள் தோடும், கையில் இருந்த ஒற்றை வரிசை வளையலின் ஜொலிப்பும், வைரங்கள் என்று பறை சாற்றி அவளின் செல்வநிலையை காட்டினாலும் அவள் முகத்தில் இருந்த சாந்தமும் தன்னிடம் வாஞ்சயாக பேசும் தோரணையும் மொத்தமாக அழகுநிலாவை ஜானகியின் அபிமானியாக மாற்றிவிட்டது.
என் பெயர் அழகுநிலா ஆண்டி. சார் என்று ஆதித்தை பார்த்து கூற வாய்திறந்தவள் அவன் தன்னை காரில் வைத்து சார் என்று கூறியதை கிண்டல் செய்தது ஞாபகம் வர, இவர் எனக்கு டாப் வாங்கிகொடுப்பதர்காக இங்க கூட்டி வந்தார் ஆண்டி என்றாள்.
இப்பொழுது ஆதித் அழகுநிலாவை முறைத்துப்பார்த்தான் அவங்க உன் பேர் மட்டும் தான் கேட்டாங்க. தேவையில்லாமல் அவர் என்று என்னை பார்த்து ஏன் இங்க வந்தோமென்று கேட்டார்களா..? என்று மனதினுள் நினைத்தபடி அவளை முறைத்துப் பார்த்தான்
உடனே இப்போ எதற்கு அழகுநிலாவை முறைக்கிற அவன் கிடக்குறான், இங்க பாரு, அடுத்தவாரம் வருற ஆதித் பெர்த்டேக்கு இப்போதான் ட்ரெஸ் எடுத்தோம். நல்லா இருக்காணு பார்த்துச் சொல்லு பிடிக்காட்ட மாத்திடலாம் என்று அழகுநிலாவிடம் அந்த உடையை காண்பித்தாள் ஜானகி .
உடனே பக்கத்தில் நின்ற ஆதித், அம்மா..... அத எதுக்கு அவகிட்ட கேக்குறீங்க எனகுத்தானே எடுத்தீங்க, நீங்க எது எடுத்தாலும் எனக்குப் பிடிக்கும் என்றான்.
அவன் அவ்வாறு கூறியதும் அதுதான் பிரச்சனையே! நீபாட்டுக்கு நான் உனக்கு எடுத்துக்கொடுக்கும் ட்ரெஸ் உனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஒண்ணுமே சொல்லாமல் வாங்கிகுவ, அதனால் தான் நான் அழகுநிலாட்ட கேட்டேன். நான் அந்த காலத்துக்காரிதானே, அழகுநிலானா உனக்கு பிடிச்சதை இந்தக்கால பெண் என்றவிதத்தில் தெரிந்து வைத்திருப்பாள் என்றாள்.
அவர்கள் அருகில் நின்று மூன்றுபேரையும் யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்த வேலாயுதத்தை பார்த்து ஆண்டி பின்னாடி நிக்கிறது யாரு? அங்கிள் தானே!, ஆண்களோட டிரஸ் பத்தி ஆண்களுக்குத்தான் தெரியும். சோ! உங்க அபிப்ராயத்தை அவங்ககிட்ட கேளுங்க என்று கூறினாள் அழகுநிலா.
அப்படியா சொல்ற! அப்போ நான் எடுக்கும் போது அவரிடம் அபிப்ராயம் கேட்டுத்தான் எடுத்தேன். அப்போ இது ஆதித்துகு பிடிக்கும் என்றாள்
அப்பொழுது வேலாயுதத்திற்கு மொபைல் ஒலி எழுப்பியது அதனை அட்டன் செய்தவர் அதில் உள்ளவர் கேள்ளிவிகேட்டதற்கு ம்..கூம் என்னால் இப்பொழுதே அங்க வர முடியாது. நான் என் பேமிலியோட பர்சேசில் இருக்கேன். உங்களால் ஒரு டூஅவர்ஸ் வெயிட் பண்ண முடியுமா? என்று கூறிக்கொண்டு இருந்தார். அதனை பார்த்த ஜானகி என்னங்க உங்களுக்கு அவசர வேலை இருந்தால் நீங்க போங்க நான் ஆதித் கூட வீட்டிற்கு போய்கிடுவேன் என்றாள்.
அவள் அவ்வாறு கூறியதும் அப்போ சரி என்று கூறியவர், போனில் இன்னும் அரை மணி நேரத்தில் தான் ஸ்பாட்டுக்கு வந்துவிடுவதாகச் சொல்லி ஜானகியிடம் நான் இரவு வீட்டிற்கு வந்து விடுவேன் என்றவர், பொதுவாக ஆதித்துகும் அழ்குநிலாவுக்கும் ஓர் தலை அசைவுடன் சென்று விட்டார்.
----தொடரும்----
{kunena_discuss:1144}