“எல்லாம் என் அம்மாவை நினைத்துதான்.”
“அவங்க என்ன பண்ணாங்க?”
“எதுவுமே பண்ணலை. அதுதான் எனக்கு பிரச்சினையே.”
தென்றல் அவள் அருகில் அமர்ந்தாள்.
“எப்ப பார்த்தாலும் படுத்துதான் இருக்காங்க. டீவிதான் அவங்க உலகமே. கொஞ்சம் கூட எதுக்குமே அலட்டிக்க மாட்டேங்கிறாங்க.”
“அவங்க எப்போதுமே இப்படித்தானே?”
“அப்பா இருந்த வரைக்கும் தெரியலை. ஆனால் இப்ப கஷ்டமா இருக்கு. வீட்டிலேயும் வேலை செஞ்சுட்டு ஹாஸ்பிடலுக்கும் ஓடி வர வேண்டியிருக்கு. அம்மா கொஞ்சம் எழுந்து உதவி செஞ்சா நல்லாயிருக்கும். அட உதவியே செய்யலைன்னாலும் பரவாயில்லை. கொஞ்சம் எழுந்து நடக்கலாம் இல்லை. உடம்புக்கு அசைவே கொடுக்காம இருந்தா நல்லாவா இருக்கும்? அப்புறம் கால்வலி குடையுதேன்னு புலம்ப வேண்டியது. தம்பி தங்கைகள் சின்னவங்க. இவங்களைப் பார்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறாள் என்று சொல்ல போய் பார்த்தனர்.
அங்கே மிகவும் சோகையாய் கிடந்தாள் ஸ்டெல்லா.
பார்த்த உடனே மனம் கலங்கிவிட்டது.
அவளது தந்தையின் உறவினர்கள் இனி அவளை ஏற்க மாட்டார்கள் என்று புரிந்து தாங்களே அவளை அழைத்துச்செல்லலாம் என்று சொல்லிவிட்டான் வடிவேல்.