அவர்கள்தான் சந்திரமதியின் இறுதிக்காரியங்களையும் செய்தனர்.
ஸ்டெல்லா அவர்களைப் பார்த்த உடன் விழித்தாள். பயத்துடன் ஒடுங்கினாள்.
வடிவேல் அவளை ஆதூரத்துடன் அணைத்துக்கொண்டான்.
“பயப்படாதேடா. நாங்க உன் சொந்தக்காரங்கதான். நீ நம்ம வீட்டுக்கு வரலாம். அங்கே உனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. இன்னும் வீட்டுக்கு பாப்பா வேற வரப்போகுது.”
அவள் மிரண்டாள். அம்மா அம்மா என்று அழுதாள்.
அவளைத் தாங்களே அழைத்துக்கொண்டு செல்வதாக சொல்லி வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர்.
பிறகு அவள் பெற்றோரை நினைத்து ஏக்கத்தில் இருப்பதை பார்த்துவிட்டு தங்களை சித்தி சித்தப்பா என்று அழைக்க சொல்லாமல் அம்மா அப்பா என்றே அழைக்க சொன்னான் வடிவேல். வளர்மதிக்கு அதன் பிறகு நடந்த பிரசவத்தில் ஒரு பையனும் பெண்ணுமாக இரட்டைக்குழந்தைகள்
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்குத் தெரியும். என்னோட அண்ணனை சைட் அடிக்கத்தானே? இவ்வளவு ஆசை வச்சிருக்கிறவ எதுக்கு பேசாம இருக்கே? அண்ணனை இங்கே வரச்சொல்ல வேண்டியதுதானே?”
“அவரோட திறமைக்கு வாய்ப்பு கிடைக்கிறப்ப நான் என்ன சொல்ல முடியும்?”
“நீ வேணா பாரு. அண்ணா இங்கே வந்தாருன்னா உன்னை விட்டுட்டு போக மாட்டாரு.”