(Reading time: 14 - 28 minutes)

"கண்ணா.. வேலப்பா.. நீ இப்படி வாக்குவாழக்காயின்னு பாசக்காரப்பயலா இருக்கறதுதாண்டா என் மொதப் பிரச்சனை.. எனக்குத் தெரியும்.. எழில் எப்பவும் இப்படித்தான்னு.. சுயநலவாதி.. இவளோ.. வாயத் தொறக்காமச் சங்கறுக்கிறவ.. எப்படிடா.. நான் பெத்த மூணும் மூணு விதமா இருக்கு.. நான் உங்களை மாதிரியெல்லாம் அதிகமாப் படிக்கலைதான்.. என்ன அந்த நாள்ல ஏதோ பி.யூ.சி படிச்சேன் அவ்வளவுதான்.. காலேஜ் மொத வருஷத்திலேயே கல்யாணமாய்டுச்சு அதுக்கபுறம் படிப்புக்கு ஒரு பெரிய வணக்கம் போட்டாச்சு.. எங்க வாழ்கை முறையும் அப்போ வேறயாத்தான் இருந்துச்சு.. நாங்கல்லாம் இப்படியே பழகிட்டோம்டா.. நீ அப்படியில்ல்லை.. நல்லா படிச்சிருக்கே.. உனக்குன்னு ஒரு பாதை வகுத்துகிட்டுப் போயிட்டிருக்கே.. அதுல்லே ஏண்டா இந்தமாதிரி சுமைத் தாங்கி ரோல் உனக்கு.. உன்னையும் ஒரு கல்யாணம் காட்சின்னு பார்க்கவேணாமா.. எப்பவும் இந்தமாதிரியே நீ இருந்துட முடியுமா.."

"அம்மா சும்மா சும்மா படுத்தாதீங்க.. உங்க கிட்டச் சொல்லமுடியாத நிறைய விஷயங்கள் இருக்கு.. பாருங்க ஒரு வயசுப் பொண்ணை வீட்டிலே வெச்சுகிட்டு நான் எப்படிம்மா சந்தோஷமா ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துட்டு இருக்க முடியும்.. இவள் என்ன செய்வாள்.. கல்யாணம் என்கிற பேச்சுக்கே என் வாழ்க்கையிலே இடமில்லை.. விட்டுடுங்க.."

"அதுசரி.. அப்போ கடன்கிறது இருக்கே உன் வாழ்க்கையிலே..சரி நேரடியா விஷயத்துக்கு வரேன்.. நீ பத்திரத்தை அடகு வெச்சியே.. நம்ம மச்சு வீட்டுகாரங்க.. அவர் பேத்திக்கு இடம் பார்க்கிறாங்க.. அவங்களுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு.. நீ சரின்னா.. கடனை அப்படியே ரத்து செஞ்சு.. பொண்ணுப் பேரிலே இன்னும் கொஞ்சம் நிலத்தையும் மாத்தி விட்டுடறாங்களாம்... என்ன சரியா.. ஏன்னா அவங்களுக்கு ஊரோட மாப்பிள்ளை வேணுமாம்.. சொல்லுடா.. இல்லாட்டி.. நம்ம நிலம் இன்னும் ஆறு மாசத்திலே கடனுக்கே மூழ்கிடும்.. அவங்க அதுவரை டைம் தந்திருக்காங்க.. அதுக்குள்ளார உன்னால புரட்டமுடியுமா சொல்லு?..", என்று கவலைப் பட்டாள் மங்கையர்க்கரசி.

பெருமூச்சுவிட்ட சிங்காரவேலன் அப்போதும் ஒன்றும் பேசாமல் கண்ணீர் மல்கத் தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்த தங்கையைப் பார்த்தவனுக்கு மனசு உதறலெடுத்தது.. 'இவளை எப்படிக் கரை சேர்ப்பது.. இது என்ன புதுக் குழப்பம்?, அப்போ என் எனண்ணப்படி நடக்க முடியாதா.. என்னுடைய திட்டங்கள் என்னாவது..', ஆயிரத்தெட்டுக் கேள்விகள் அவன் மண்டையைக் குடைந்தன.

விடை யாரறிவார்..?

தொடரும்

Episode # 09

Next episode will be published as soon as the writer shares her next episode

{kunena_discuss:1138}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.