(Reading time: 9 - 17 minutes)

எத்தனை கஷ்டப்பட்டு படிக்கவைத்தேன். ஆனால் இப்படி வக்கத்துப் போய் நிக்க வைச்சிட்டியேடா பாண்டி என்று அழுதான் டிரைவர் துரை, பாண்டியைப் பார்த்துக்கொள்ளும் பாட்டி வந்துவிடவே,வாங்க பாட்டி நான் குளிச்சிட்டு வேலைக்குப் போகணும் நீங்க அவனுக்கு அப்பறமா ஒருவாய் கஞ்சி மட்டும் கொடுத்துடுங்கள்,

ஏப்பா நீயேன் இப்படி இருக்கியே, அவனை ஒரு டாக்டருகிட்டே சொல்லி வைக்கலாம்.

நானும் பார்க்காத டாக்டர் இல்லை, ஆனா வேற வழியில்லை, அவனை வயிறு குடல் எல்லாம் புண்ணாகிப் போச்சு சரி செய்ய முடியாது. மருந்து மாத்திரையில் காலப்போக்கில் குணமாகும் என்று சொன்னாங்க அனா ஒரு வாய் கஞ்சி குடிக்கும் போது அவன் படற வேதனை அப்பப்பா தாங்க முடியலை அப்படியும் இதெல்லாம் யோசிக்கிறா மாதிரி அவன் இருக்கானா பாரு ? என்ன நடக்குதுன்னு கூட தெரியலை, மனசு வலிக்குது பாட்டி

மனசை விட்டாறதேய்யா இவனை இந்த கதிக்கு ஆளாக்கினவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க

விடுங்க பாட்டி நானும் அப்படித்தான் நெனைச்சிட்டு இருந்தே, ஆனா தப்பு நம்ம பையன் மேலேயும் தப்பு இருக்குதே, என்னத்தே சரி செய்ய ? சரி பாட்டி நான் வரேன் அவன் காலரை சரிசெய்து கொண்டு கிளம்பினான்.

கிளம்பியவனின் எதிரே அவர்கள் எதிரே நான்கு பேரும் நின்றார்கள். என்ன துரை எங்கே கிளம்பிட்டீங்க வினிதாவின் கேள்விக்கு பதில் சொல்லாதவனின் பார்வை நேரடியாக விஜயாவின் மேல் நின்றது

இவளெங்கே இங்கே அதிலும் ...

என்ன பொய் சொல்லான்னு யோசிக்கிறீங்களா துரை ?! இல்லை ரொம்ப நாளைக்கு அப்பறம் மனைவியைச் சந்தித்த சந்தோஷமா ?! ஆனா பாரு துரை உன் மனைவி இப்போ சந்துருவை ஏமாத்திகிட்டு இருக்கா ?

துரையால் ஏதும் பேச முடியவில்லை, அமைதிகாத்தான்

இங்கே பாருங்கம்மா உங்க பேரு கூட எனக்கு நினைவு இல்லை, நான் ஒரு துணை நடிகைன்னு முன்னமே சொன்னேன் ஒரு நாடக ஒத்திகை பார்த்திட்டு இருந்தப்போ இவரு வந்தாரு, எங்க நாடகக் கொட்டகைக்கு பக்கத்திலதான் இவரு இருந்தாரு, டிராம கம்பெனி முதலாளி மூலமா எனக்கு அறிமுகம் ஆனாரு, எம்பேரு துரை என்னை நம்பி பெரிய குடும்பம் இருக்கு, படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கலை தெரிந்த ஒரு இடத்தில டிரைவர் வேலை காலியா இருக்கு, அந்த வேலை கிடைக்க நீங்கதான் எனக்கு மனைவியா நடிச்சு உதவுனுமின்னு கேட்டாரு, பணம் கொஞ்சம் அதிகம் தந்ததால நான் அதுக்கு ஒப்புகிட்டேன். அப்படித்தான் ஒரு நாள் ராத்திரி உங்களையும்,மாயாவையும் பார்க்க வேண்டியதா போச்சு, துரைக்கும் வேலை கிடைச்சது.

அதுக்குப் பிறகு மூன்று மாதம் கழிச்சு மறுபடியும் என்னைப் பார்க்க வந்த துரை, ஏற்கனவே நாம போட்ட நாடகம் சக்ஸஸ் அதனால எனக்கு வேலை கிடைச்சுது ஆனா இப்போ ஒரு சிக்கல், முதலாளியம்மா என் பிள்ளையைப் பார்க்கணுமின்னு சொல்றாங்கன்னு சொன்னார் வாடகைக்கு ஒரு குழந்தையை எடுத்துக்கிட்டு நானும் இவரும் அந்த முதலாளியம்மாவைப் பார்க்க ஏதோ ஒரு சபாவுக்குப் போனோம், அவங்க குழந்தைக்கு செயின் போட்டாங்க, இந்தமுறை பணத்தோடு இரண்டு பவுன் செயினும் உனக்குத்தான் சொல்லி தந்தாரு அதற்கு பிறகு நான் துரையைப் பார்க்கவே இல்லை, இதுதான் நடந்தது விஜயா தன் எதிர்காலம் பற்றிய பயத்தில் எல்லாவற்றையும் ஒப்பித்தாள்.

துரை பொறியில் அகப்பட்ட எலியாய் மாறினான்.

அதேசமயம் வீராவும் அங்கே வந்துவிட, டிரைவர் இரண்டே அடியில் உண்மையைக் கக்க ஆரம்பித்தான். நான் எல்லாத்தையும் சொல்லிடறேன். அவர்கள் நால்வர் பார்வையும் குழந்தையாய் வாயில் எச்சிலோடு நடப்பது ஏதும் அறியாமல் இருந்த பாண்டியிடம் போய் நின்றது.

நான் எல்லாத்தையும் சொல்லிடறேன், பாண்டி என் சொந்த தம்பி, எங்களுக்கு அப்பா அம்மா கிடையாது, நான் அவன் மேல உயிரையே வைத்திருந்தேன், பாண்டிக்கு கொஞ்சம் மென்மையான மனசு, ஊட்டியில டான்ஸ் காலேஜிலே ஒரு மாசத்திற்கு, டீச்சிங்காக போன மாயாவைச் சந்தித்ததும், பாண்டிக்கு அவங்க மேல் காதல் ஏற்பட்டது, அங்​கே மியூசிக் டிச்சரா​ வே​லை பார்த்தவன் பாண்டி. யாரிடமும் அதிகம் பேசாத பாண்டி மாயாவின் மேல் வைத்த அன்பை தெரிவிக்க ரொம்பவும் துடித்தான். அன்று  பாண்டியின் பிறந்தநாள் அந்த பிறந்தநாள் விழாவில் மாயாவும் கலந்துகிட்டாங்க அப்​போதான் பாண்டி ஒரு விலையுயர்ந்த பரிசை மாயாவுக்காக வாங்கி வைத்திருந்து அவளுக்காக காத்திருந்தான். அவ​னை ஏமாற்றாமல் மாயாவும் அந்த விழாவிற்கு வந்திருந்தாள்

மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் மாயா கையில் வைத்திருந்த பொக்கேவைக் கொடுத்தாள். தேங்ஸ் மாயா நீங்க வந்தது தான் இந்த பிறந்தநாளின் ஹைலைட்டே, ரொம்ப சந்தோஷமா இருக்கு, விழா முடியும் வரையில் இருந்துதான் போகணும் உங்களுக்கு உங்களிடம் நான்​ கொஞ்சம் ​பேசணும்.

என்ன விஷயம் ?

அவள் பார்​வையில் ​தென்பட்ட கூர்​மை கூட அழகாய் இருந்தது அந்த இடத்திற்கே அவள் வருகை அழகு சேர்த்ததைப் போல் இருந்தது, மாயா​வை ரசித்தபடி​யே​

சொல்லத்தா​னே​ போகி​றேன் அதற்கு இன்னும் ​கொஞ்ச​நேரம் காத்திருக்க​ வேண்டும் ப்ளீஸ் !

அவள் ​மேற்​கொண்டு ஏதும் ​பேசாமல் அ​மைதியாய் அவ்விடத்​தை விட்டு நகர்ந்தாள் எப்படியாகிலும் தன் மனதில்  உள்ளவற்றை  அவளிடம் சொல்லிடவேண்டும் என்று எண்ணியபடியே சென்றான். ஆனால், அதற்கான வாய்ப்பு வந்தபோது சொல்ல முடியாமல் நாக்கு ஒட்டிக்கொண்டது.  

மாயா வருவாள்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:1142}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.