இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்காக
ஒரு பாடல் பாடி கொண்டேன்
இதுதானா இதுதானா
எதிர் பார்த்த அந்நாளும் இதுதானா
இவன் தானா இவன் தானா
மலர்சூடும் மணவாளன் இவன்தானா..”
என்று அனைத்து ஜோடிகளும் ஆட தொடங்கி பல பாடல்களுக்கு ஆடியவர்கள் அஸ்வினையும் கவியையும் அழைத்து வர அனைத்து ஜோடிகளும்
ரொமாண்டிக் பாடல்களுக்கு கைகோர்த்து ஆட..
ஆடிக்கொண்டிருந்த கவியை இழுத்துக் கொண்டு மேடைக்கு சென்றான் அஸ்வின். அவளை அந்த மேடையில் நிறுத்தி மைக்கை எடுத்தவன்
மனம் விட்டு உண்மை மட்டும்
உன்னோடு பேசிட வேண்டும்.... என்று அவன் பாடி முடிக்க அவர்களது மேல் மலர் குவியல்கள் விழுந்தது.
நீ காட்டும் காதலை அள்ளி
உன் மேல் பூசிட வேண்டும் என்று அடுத்த வரிகளை பாடி முடித்தவன் தனது சட்டை பையில் இருந்து ஒரு பெட்டியை எடுத்து அதில் இருந்த ஒரு மோதிரத்தை எடுக்க அது அவர்கள் இருவரது பெயரின் முதல் எழுத்தும் பின்னி பிணைந்து வருவதுபோல் செய்யப்படிருந்தது.
நான் காணும் ஒற்றை கனவை
உன் காதில் உளரிட வேண்டும்
என்று பாடிக் கொண்டே அதனை அவள் கைகளில் முட்டி போட்டு அவன் அணிவிக்க அப்பொழுது ரோஜா இதழ்கள் மேலிருந்துக் கொட்ட அவர்கள் இருவரும் ரோஜா இதழ்களில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அந்த ரோஜா இதழ்கள் மழை முடிந்ததும் அவன் தான் அணிவித்த மோதிரத்துடன் சேர்த்து அவளது கைகளிளும் இதழ் பதிக்க (இதையெல்லாம் நல்லா பண்ணியே வாய திறந்து லவ்வ சொல்ல வேண்டி தானடா லூசு பையா...)
அவனது ஒவ்வொரு செயல்களிலும் உணர்ச்சி பிழம்பாய் மாறிக் கொண்டிருந்தவள் அவ்வளவுதான் முடிந்தது என்று நகர போக அவளது கைகளை பிடித்து தடுத்தவன்..
அவளது கைகளை தனது தோள்களின் மீது வைத்து அவளது பாதங்களை கைகளால் தூக்க
அவன் எதற்கு அவன் தோள் மீது கைகளை வைத்தான் என்று புரியாமல் நின்றவள் அவன் தன் பாதத்தை தொட்டு கால்களை தூக்கவும் நிற்கமுடியாமல் தனது இருகைகளாலும் அவன் தோள்களை பிடித்துக் கொண்டு அவன் செயலை தடுத்து தனது கால்களை இழக்க,அதை புரிந்துக் கொண்டு,அவன்அவளை நிமிர்ந்து பார்க்க
அவன் தன் கண்களால் அவளிடம் கெஞ்ச அதை புரிந்துக் கொண்டவள் அதற்கு மேல் மறுப்பு தெரிவிக்காமல் இருக்க அவன் சதீஷை பார்க்க அவன் அவனது கைகளில் ஒரு சிறு பெட்டியை தந்தான்
எனை மீறி உன்னிடம் மயங்கும்
என்னை நான் தடுத்திட வேண்டும்
என்று பாடிக் கொண்டே அந்த சிறிய பெட்டியினை திறக்க அதில் ஒரு ஜோடி மெட்டிகள் இருந்தன..
இதுவரை அவர்கள் திருமணமான நாளில் இருந்து அவள் மெட்டி அணியவில்லை..,
அன்று அவன் அணிவிக்கவில்லை....இன்று அது நடக்க போகிறது
அதை பார்த்தவள் கண்களில் கண்ணீர் வர
கூடாதே கூடாதே என்னால் முடிய
கூடாதே
போகதே போகதே என்னை நீ தாண்டி
போகதே.. என்று பாடிக் கொண்டே அவளது இருகால்களின் விரல்களிலும் அவன் அணிவித்து விட்டு அவள் கண்களை பார்த்துக் கொண்டே அவன் எழ
நெருங்காதே
நெருங்காதே என்
பெண்மை தாங்காதே
திறக்காதே திறக்காதே என்
மனதை திறக்காதே...என கண்களில் கண்ணீருடன் பாடியவள் அவனை பாய்ந்துக் கட்டிக் கொண்டாள்.
அவனும் அவளை இறுக்கி கட்டிக் கொண்டான்
அவனது காதலின் ஆழம் அவளுக்கு புரிகிறது இருந்தாலும் அவளுக்குள் ஒரு உணர்வு எதையும் ஏற்றுக்கொள்ள முடியாமல்.....,