(Reading time: 24 - 48 minutes)

அவனுக்கோ டென்ஷன் ஏறிக்கொண்டிருந்தது,எப்ப பார்த்தாலும் இப்படியே யோசிச்சிகிட்டு இருக்குறதே இவளோவோட வேலையே..

“என்னோட குழந்தைய வளக்குறதுக்கு அவர் யாரு..,எங்க அம்மாவ திரும்ப கொல்லவா..” என்று அவள் மேலும் மேலும் பேசிக் கொண்டு போக அவனுக்கோ கோபம் ஏறிக்கொண்டே இருந்தது.

“என்னடி ஓவரா பேசிக்கிட்டே போற..,எங்க மாமா என்ன கொலை பண்றவரா..,எங்க மாமாக்காக தான் நீ வீட்ட விட்டு போனப் பிறகும் உன்னை கூப்பிட்டு வந்தேன்..,தெரிஞ்சிக்கோ,என்ன வளர்த்ததே எங்க மாமா தான்..,என்ன நல்லா வளர்த்தவரு என்னோட பொண்ண நல்லா வளர்க்க மாட்டாறா..,உனக்கு எப்படி பிறக்கபோகுற குழந்தை உங்க அம்மாவா  இருப்பாங்கனு உனக்கு எப்படி நம்பிக்கை இருக்கோ அப்படி தான் எனக்கும் என்னோட மாமா என்னோட குழந்தையை வளர்ப்பாரு” என்று கூற

அவனது ஒவ்வொரு சொல்லிலும்  என்னை என்னோட அஸ்வினுக்கு பிடிக்கலையா அவன் எல்லார்க்காகவும் தான் என்னை சகிச்சிட்டு இருக்கானா..,அவனோட வாயிலிருந்து ஒரு தடவை கூட உன்ன நான் உனக்காக ஏத்துக்குறேனு சொல்ல மாட்டானா என்று யோசித்துக் கொண்டிருப்பவளுக்கு  அவனது ஒவ்வொரு சொல்லும் அந்த எண்ணத்தை வலுபடுத்த வைத்துக் கொண்டிருந்தது.

“அஸ்வின் அப்ப (அம்மா அவன் கோபமா இருக்குறதுக்கு காரணமே நீ அவனா அஷு மாமானு கூப்பிடலனு தான்.) நிச்சயதார்த்தம் அன்னைக்கி  நீங்க செஞ்சது எல்லாம் எனக்காக இல்லையா..”என்றுக் கேட்க

கோபத்தில் இருந்த அவனும் என்ன வார்த்தைகளை  சொல்கிறோம் என்று தெரியாமல் பேசினான்.அவனை பொருத்தவரை அவன் இனி எது சொன்னாலும் அவள் நம்ப மாட்டாள் என்ற எண்ணம் வந்திருந்தது..,ஆனால் அவளோ அவன் சொல்ல போகிற பதிலுக்காய் காத்துக்கொண்டிருந்தாள்.விதி திரும்பவும் அவர்களை சுற்றி தனது ஆட்டத்தை ஆரம்பித்தது.

“ஆமாம்டி..,நான் நீ இருக்குறதுக்காக தான் நான் அப்படியெல்லாம் பண்ணினேன்...(லூசு அவ இல்லடா நீ தான்...) ..”என்று அவன் கூற

“அன்னைக்கி நடந்த எல்லாமே அந்த காரணத்துக்கு மட்டும் தானா ...”என்று அவள் கேட்க அவனோ எதைக் கேக்குறாள் என்று புரியாமல் அதற்கும் அவன் தலையாட்டி வைக்க

“அதுக்கு எதுக்கு என்னை தொட்ட,அப்ப  நீ  என்னை வி...”அவள் பேசி முடிப்பதற்குள் அவனது விரல்கள் அவளது கன்னத்தில் பதிந்திருந்தது

“சீ..,உனக்கு என்னிக்கி டி அடுத்தவங்க மனச புரிஞ்சிகிட்டு பேச தெரிய போது(ஆமாம் இவரு மட்டும் பெரிய ஒழுங்கா...)இப்ப என்ன பீல் பண்ண வச்சிட்டடி அன்னைக்கி நான் உன்கிட்ட அப்படி நடந்துக் கிட்டதுக்கு...,உனக்கு தான் தெரிதே எனக்கு உன்னை பிடிக்கலனு..,அப்புறம் எதுக்குடி நான் செலெக்ட் பண்ண சேலைய கட்டின..”என்று அவன் கேட்க

அவளோ அவனது சொற்கள் தந்த அதிர்ச்சியிலும்,அடி தந்த அதிர்ச்சியிலும் நின்றுக் கொண்டிருந்தாள்.

அவளது அருகில் வந்தவன் “இப்ப சொல்லுறேன் டி..,நீ இங்க இரு இல்லமா போ ,எனக்கு எந்த கவலையும் இல்ல..,இனிமே நீ யாருக்காகவும் எனக்கு வேணாம் டி..”என்று கூறிவிட்டு சென்று விட்டான்.அவனுக்கோ அவனது அன்பை அவனது காதலை அவள் புரிந்துக் கொள்ளவில்லையே என்ற ஏக்கம்...

அவளுக்கோ அவன் தன் மீது காதல் வைத்துள்ளானா என்ற ஏக்கம்..,

ஆக இருவரின் ஏக்கமும் கோபமாகி அங்கே அவர்களின் பனி போருக்கு காரணமாகி இருந்தது.

‘அப்பாடா ஒரு வழியா லாங் எபி போட்டுட்டேன்.மறக்காம கமெண்ட்ஸ் போடுங்க..,நெக்ஸ்ட் எபில சொல்லுறேன் கவி வீட்டை விட்டு போவாலா இல்ல இங்கேயே இருந்து அஸ்வின் உயிர எடுப்பாலா..யோசிச்சிகிட்டே  இருங்க...”

aeom

தொடரும்

Episode # 23

Episode # 25

{kunena_discuss:1099}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.