வருணா தன் அறையில் உள்ள டிவிடி ப்ளேயரில் எதையோ ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்க, அவளை தேடி அவளது அறையில் எட்டிப் பார்த்தாள் செண்பகம்,
“வருணா.. இன்னைக்கு நிறைய துணி இருக்கறதால, மொட்டை மாடியில காய வைக்கப் போறேன்.. என்னை தேடாதே” என்று சொல்ல, இன்னும் டிவிடி ஆராய்ச்சியில் ஈடுபட்டவள், “சரி அண்ணி..” என்று அந்த நிலையில் இருந்தப்படியே தலையாட்டினாள்.
தாழ்ப்பாள் போடாமல் சாதாரணமாக கதவை சாத்திய செண்பகம், மொட்டை மாடிக்கு செல்ல படிக்கட்டுகளில் ஏறினாள். அந்த அப்பார்ட்மென்ட் மொட்டை மாடியோடு சேர்ந்து ஐந்து தளங்களை கொண்டது.. அவர்கள் இருப்பதோ மூன்றாவது மாடி..
செண்பகம் அந்தப்பக்கம் போனதும், இடுப்பில் துப்பட்டாவை கட்டிக் கொண்டு, ப்ளேயரில் பாடலை ஒலிக்க விட்ட வருணா
...
This story is now available on Chillzee KiMo.
...
. இப்படித்தான் அறைக்குள் வந்து ஒதுங்கிக் கொள்வாள்.
வெளியில் உட்கார்ந்திருந்த அவனும் அப்படித்தான் காக்க காக்க சூர்யா மாதிரி.. “அவளுக்கு என்ன பிடிக்கல.. அவ பார்வையிலேயே அது தெரியுது..” என்று மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தான். அப்போது துணியை காய வைத்துவிட்டு செண்பகம் வீட்டுக்குள் வந்தாள்.