(Reading time: 21 - 42 minutes)

பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது

நரம்புகள் பின்னப் பின்ன நடுக்கமென்ன

தொடத் தொட மலர்ந்ததென்ன பூவே

சுடச் சுட நனைந்ததென்ன

என்று பாடியவளை கைகளில் ஏந்திக்கொண்டு கட்டிலை அடைந்தவன் பாடலை பாடுவதை மறந்து பாடலின் வரிகளை அவளுடன் சேந்து அனுபவிக்க ஆரம்பித்தான்

பனிதனில் குளித்த பால்மலர் காண

இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்

பசித்தவன் அமுதம் பருகிடத் தானே

பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்

இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே...

அவனின் செயலை வெட்கம் காரணமாக தடுக்க முயன்றவளிடம் கேள்விகேட்டான் அதற்கு பாட்டாகவே

மலர் கொல்லும் காற்றாக இதயத்தை உலுக்காதே....

என்று பதில் கொடுத்தால்

தொடத் தொட மலர்ந்ததென்ன பூவே

சுடச் சுட நனைந்ததென்ன

பார்வைகள் புதிதா? ஸ்பரிசங்கள் புதிதா?

மழை வர பூமி மறுப்பதென்ன?

தொட தொட மலர்ந்ததென்ன பூவே

தொட்டவனை மறந்ததென்ன?

பாடலின் முடிவில் அவளை முழுவதும் தனது ஆழுமையினுள் கொண்டுவந்து சுகித்து கிறங்கினான் ஆதித். .

ணையுடன் சுகமாய் உறங்கிகொண்டிருந்த ஆதித்தின் நிம்மதிக்கு உலைவைக்கும் செயலில் அன்று இரவு ஆதித்தின் கம்பெனிக்கு சாப்ட்வேர் ப்ரோகிராம் செய்துகொடுத்து சர்வீஸ் செய்துவரும் ஜேம்ஸ் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்

ஜேம்ஸின் தங்கை கல்யாணம் இன்று நல்லபடி முடிந்தும் அவனுள்ளம் சந்தோசத்தால் நிரம்பவில்லை அதற்குகாரணம் அவனின் அப்பா மினிஸ்டர் கந்தனின் காலேஜில் பிரபசராக வேலை பார்ப்பதால் கரஸ்பாண்டன்ட் என்ற முறையில் மினிஸ்டர் காந்தனுக்கு பத்திரிகை வைத்திருந்தார்.

மினிஸ்டர் காந்தன் தனது கம்பெனி மற்றும் காலேஜில் வேலைபாற்பவர்கள் யாரேனும் பத்திரிக்கை வைத்தால் மக்களுடன் தான் இயல்பாய் பழகுவதுபோல் தோற்றத்தை உருவாக்க அவர்களின் வீட்டு விழாவில் கலந்துகொள்வதை வழக்கமாக்கா வைத்திருப்பார். இந்நிலையில் தனது கல்லூரி ப்ரொபசர் வீட்டுதிருமணத்திற்கு அவர் டெல்லிக்கு போவதால் செல்லமுடியாத சூழ்நிலை உண்டானதால் தன் மகனை தன் சார்பாக அந்த கல்யாணத்தில் கலந்துகொள்ளச்சொல்லி அனுப்பிருந்தார்

கல்யாணத்துக்கு வந்த நரேனை ஜேம்ஸின் அப்பா மாலை மரியாதையுடன் மணமக்களின் அருகில் வாழ்த்துவதற்கு கூட்டிக்கொண்டு போவதை பார்த்த ஜேம்ஸ் ஆத்திரமடைந்தான் இவனெல்லாம் கண்டிப்பாக வாழ்த்தவேண்டுமா? என்ற கடுப்பும் வீடியோவில் பார்த்த தங்கையை அடையாளம் கண்டுகொண்டு அவனின் பார்வை ரசித்ததை அருவருப்பாக உணர்ந்தனர். ஜேம்சும் மணமக்களும் அவனை பரபரவென்று பிடித்திழுத்து மண்டப்பத்தைவிட்டு துரத்தவேண்டும் என்ற எண்ணம் உண்டானது அவ்வாறு செய்யமுடியாமல் அவனின் அப்பாவின் பதவியும் அவனுடன் வந்த கட்சி தொண்டர் என்ற பேரில் வந்த அடியாட்களும் அவனின் செல்வநிளையும் நிலையும் அவனை கட்டிபோட்டது .

எனவே கல்யாணம் முடிந்த அன்று இரவே அவனின் முகத்திரையை கிழிக்க முடிவெடுத்த ஜேம்ஸ் தன்னுடைய மொபைலில் இருந்த நடிகையுடனான அவனின் அந்தரங்கத்தை வலைதளத்தில் வைரலாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டான் அதில் அவனுடன் கூத்தடித்த மாதேஷ் மற்றும் இன்னும் இருவரும் ஈடுபட்ட அசிங்கமும் சேர்ந்து கடைபரப்பபட்டது .

மேலும் அந்த காட்சியின் பேக்ரவுண்ட் சவுண்டாக நரேனின் கேவலமான பழக்கத்தையும் அதனால் பாதிக்கப்படும் பெண்களின் நிலையையும் காணொளியாக இருக்குமாறு இருந்தது .

ஆதித் அந்த வீடியோவை வைரலாக்கவில்லை காரணம் அன்று ஹோட்டலில் காந்தனுடனான பேச்சுவார்த்தையின் முடிவில் ஆதித் அவரை வார்ன் பண்ணியிருந்தான். உன் மகன் நரேனை எச்சரித்து வை இனி என் கண் அவனின் மேல் அப்போ அப்போ விழுந்துகொண்டே இருக்கும் இதேபோல் திரும்பி பொண்ணுங்களை அவங்களுக்கு தெரியாம போட்டோ வீடியோ எடுக்கிறது சில்மிசம்பன்றது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிஞ்சது என் கிட்ட இருக்கின்ற போட்டோஸ் வீடியோசை வலைதளத்தில் விட நான் யோசிக்க மாட்டேன் அதில் இருக்கிறது உன் மகன் மட்டுமல்ல என் எதிரி மாதேசும்தான் அதனால் அது வெளிவந்து உன் மானத்துடன் என் அப்பாவின் மூத்த பிள்ளை மானம் போவதை பற்றி நான் கவலை படமாட்டேன் என்று கூறியிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.