(Reading time: 10 - 20 minutes)

வந்திருந்த அனைவருக்கும் குளிர்பானங்களை விநியோகித்துவிட்டு, அசோக்கின் பக்கத்தில் அமர்ந்தாள் லட்சணா. இந்த கேஸில் நல்லபடியா தீர்வுகள் கிடைச்சது சந்தோஷம் தான், எனிவே மாயாவை இனிமேல் நல்லபடியா பார்த்துக்கோங்க கமல், பணம் புகழ் கூட ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தனை குளறுபடிகளை கொண்டு வருகிறது என்பதற்கு இந்த கேஸ் ஒரு உதாரணம். 

வினிதா இப்போ எங்கே ?

அவ எங்க விசாரணையில் இருக்கா ? ஏன் மேடம் 

அவளை என் சகோதரி மாதிரிதான் நினைத்திருந்தேன் எந்த இடத்தில் அவ என்னை விரோதியா பார்க்க ஆரம்பிச்சான்னு தெரியலை, அந்த அளவிற்கு நான் அவளை...

மேடம் இதெல்லாம் போட்டு மனசை உழப்பிக்கிக்காதீங்க ?! வினிதா வளர்ந்த சூழ்நிலை கூட காரணமா இருக்கலாம் அழகு, பணம், புகழ் என்று வட்டத்தில் சிக்கியிருப்பவர்களுக்கு ஒருவித மன உளைச்சல்ன்னா அவங்களை பார்த்து கம்பேர் பண்ணிப்பண்ணி மற்றவர்களுக்கு ஒருவித உளைச்சல். விடுங்க இனிமே உங்க வாழ்க்கையிலே எந்த சிக்கலும் வர வாய்ப்பில்லை பிரியா இருங்க. 

ஆமா மாயா நம்மைச் சுற்றியிருந்த எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்திடுச்சி, உனக்கு அதிக உறுத்தல் தந்த சந்துரு கூட இப்போ திருந்திட்டான். மேட்டூர் பக்கத்தில் என் கிராமத்திலே உள்ள நிலத்தையும் வீட்டையும் அவங்க இரண்டு பேர் பேருக்கு எழுதி தந்திட்டேன். அந்த விஜயாவைக் கல்யாணம் செய்துகிட்டு பர்வதம்மாளையும் கூட்டிட்டு போறதா வாக்கும் கொடுத்திட்டான். டிரைவர் மணியோட தம்பிக்கு நல்ல மருத்துவம் கிடைக்க ஏற்பாடு செய்தாச்சு, மணிக்கு சொந்தமாக கார் புக் பண்ணியிருக்கிறேன் டிராவல்ஸ் வைச்சி பிழைச்சிக்குவான். கமல் சொல்ல சொல்ல நெகிழ்ந்தாள் மாயா நான் உனக்கு எல்லாமுமாக இருப்பேன்னு அன்று சொன்ன வார்த்தைகள் காதிற்குள் ரீங்கரித்தன. திடுமென்று நினைவு வந்தவளாய் அப்போ என்னைப்போலவே இருந்த சுப்ரியா 

சுப்ரியாவோட மரணம் ஒரு தற்கொலை தான் ! குழந்தையைக் காரணம் காட்டி ஏற்கனவே வாழ்ந்திட்டு இருந்த நரகத்தைவிடவும் கொடிய வேதனைக் கொடுத்த ரவியையும் அவளால மறக்கமுடியலை, அதே நேரத்தில் பத்துமாதம் சுமந்து பெத்து அதற்கு உரிமை கொண்டாட முடியாத குழந்தையோட பிரிவையும் மறக்கமுடியலை, ராஜ்வீர், வினிதா, ரவி அவனோட மனைவின்னு தன்னைச் சுற்றியும் முகமூடி மனிதர்களையே பார்த்து, பார்த்து வெறுத்துப் போயிருந்த சமயம், ராஜ்வீர் கிட்ட இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அவங்க எடுத்த நடவடிக்கைதான் தற்கொலை, வினிதாவுடைய பேச்சை நம்பி சென்னைக்கு வந்த சுப்ரியா வந்த மறுநாளே வினிதா சொன்னது எல்லாம் பொய்யுன்னு தெரிஞ்சிகிட்டாங்க. பல ஏமாற்றங்களை அடைந்ததால வினிதாவின் செய்கை அவங்களை பாதிக்கலை ஆனா உலகம் முழுமைக்கும் ஏமாற்றமும், துரோகமும் தலைவிரிச்சி ஆடுதுன்னு புரிஞ்சிகிட்டாங்க. மாயாவிற்கு கொஞ்ச கொஞ்சமா ஸ்லோ பாய்சன் கொடுத்து கொல்லணுமிங்கிறது வினிதாவின் திட்டம் அதில் சந்துருவை மாட்டிவைத்து ஆளில்லாத சொத்தை அடைவது அவள் எண்ணம். மாயாவின் கையெழுத்தில் மாயாவின் வீட்டை அவளுக்கு மாற்றியது போல ஒரு டாக்குமெண்ட் ரெடி செய்திருக்கிறாள் என்று லாயர் சார் என்னிடம் காண்பித்தார். வினிதாவின் மேல் சந்தேகம் வர முக்கிய காரணம் அவர்தான். 

சுப்ரியா இருந்த ஆறு நாட்களில் வினிதா செலுத்திய மருந்து ஒரு புறம், ஏற்கனவே நலிந்து இருந்த சுப்ரியாவின் உடல்நிலை ஒருபுறம், இதெல்லாம் போதாது என்று டிரைவர் மணி வேறு தன் தம்பியிடம் மாயாவை அழைத்து போக எண்ணி, மயக்க மருந்தை செலுத்தியது ஒருபுறம் இவையெல்லாம் சேர்ந்து தான் மாயாவின் வேடத்தில் இருந்த சுப்ரியாவை பலி வாங்கியது. இதில் முதல் குற்றவாளி வினிதாதான் அவளே எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டாள். 

உங்களோட பணி இந்த விஷயத்தில் அளவிட முடியாதது ஸார் என்னோட மாயா எனக்கு கிடைப்பாளான்னு நான் பயந்திருந்தேன் ரொம்பவும் நன்றி ஸார்..கமல் வீரா கெளதமின் கைகளைப் பற்றிக்கொண்டான்.

இதெற்கெல்லாம் காரணம் அசோக்கும் லட்சணாவும்தான் அவர்கள் இல்லையென்றால் பெங்களூரில் மாயா அனாதையாக கிடப்பது யாருக்கும் தெரிந்திருக்காது. அந்த கார் விபத்து நடந்திராவிட்டால் மாயா ராஜ்வீரின் கையில் சிக்கியிருப்பார். எல்லாமே கடவுளின் செயல்தான் இனி உங்களுக்கு நல்ல காலம், அப்போ நாங்க கிளம்பறோம் அவர்கள் அனைவரும் விடைபெற்றுப் போக இரண்டு ஜோடிகளும் ஒருவரையொரும் பார்த்து சிரித்துக்கொண்டார்கள். அவர்கள் இருவருக்குமே தனிமை தேவைப்பட்டதை அந்த சிரிப்பு உணர்த்தியது. 

னிமை தந்த சுதந்திரத்தில் மாயா கமலின் கரங்களில் சிறைப்பட்டு இருந்தாள். 

என்ன கமல் இது இன்னமும் அசோக்கும் லட்சணாவும் போகலை நம்மளை இப்படிப் பார்த்தா என்ன நினைப்பாங்க ?

ஒண்ணும் நினைக்கமாட்டாங்க என்னடா நாம எவ்வளோ அட்வான்ஸாக இருக்கிறோம் இதுங்க என்ன பேசியே நேரத்தை வேஸ்ட் ஆக்குறாங்கன்னு நினைப்பாங்க? ஒருமுறை உன்னை விட்டு பிரிஞ்சி போனதற்கே நான் இத்தனை வேதனை இனி யார் சொன்னாலும் உன்னை விட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகரப்போவதில்லை, விக்கிரமாதித்தன் வேதாளத்தை சுமந்தாற்போல உன்னை முதுகிலேயே வைத்துக் கொள்கிறேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.