கல்யாணியை இதுபோன்று அவன் இரண்டு மூன்று முறை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கின்றான்… முதல் தடவை பயந்த கல்யாணியின் கரங்களைப் பிடித்துக்கொண்ட கௌஷிக், மறுமுறை அழைத்துச் சென்ற போது கல்யாணியோ பதட்டம் இல்லாது அதனை எதிர்கொள்ள, புன்னகைத்தான் கௌஷிக்…
டேக் ஆஃப் ஆகும்போது பயப்படாத தாயின் சீட் பெல்ட் மட்டும் ஒவ்வொரு முறையும் அவன் தான் அணிவித்து விடுகிறான்…
அதே போல் தான் இப்பொழுதும் அதனை தாயிற்கு செய்துவிட்டு, அவர் முகத்தில் டேக் ஆஃப் ஆகும் பதட்டம் தென்படுகிறதா என பார்த்திட, அவரோ சீட்டில் கண் மூடி சாய்ந்தபடி, அமைதியாய் இருந்திட, அவருக்கு எவ்வித பதட்டமும் இல்லை என தெளிவாய் உணர்ந்து கொண்டவன், நிம்மதியுடன் சாருவைப் பார்த்திட, அவள் முகத்தில் இன்னமும் பதட்டம் தெளிந்தபாடில்லை…
முதல் முறை ப்ளைட் பயணம் எனும் போது யாராய் இருந்தாலும் சற்றே பதட்டம் கொள்வது இயல்புதான் என உணர்ந்து கொண்ட போதும், அவனுக்கு அவளின் பதட்டத்தை அவ்வாறு எளிதாய் எடுத்துக்கொள்ளத்தான் முடிந்திடவில்லை…
வேகமாய் அவளின் விரலினைப் பற்றிக்கொள்ள முனைந்தவன், சட்டென கண் மூடி தவித்துக்கொண்டிருக்கும் அவள் முகத்தினைப் பார்த்துவிட்டு, கைகளை விருட்டென எடுத்துக்கொண்டவன், மெல்ல அவளை அழைத்திட்டான்…
“சாரு…”
அவனின் மெல்லிய அழைப்பில் அவள் விழி திறந்திட, அவளின் விழிகளில் தெரிந்திட்ட பதட்டம் அவனது இதயம் நுழைந்திட்டது வேகமாய்…
அவள் பதட்டம் தெளியாது அவனைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, சட்டென அவன் தன் கரத்தினை நீட்டி இமைகளை லேசாய் மூடி திறக்க,
விழி விரிய, கணம் கூட தாமதித்திடாது அவனது கரத்தினில் தன் கரம் அவள் சேர்த்திட, அவனது கரத்தினில் பதிந்த அவள் கரங்களை வலிக்காது அவன் பிடித்துக்கொள்ள,
அந்நேரம், ப்ளைட்டும் ஒரு ஜர்க்குடன் டேக் ஆஃப் ஆக, அவளோ வலது கரத்தினை அவன் கரங்களில் தந்து விட்டு, இடது கரத்தினை அவள் தோள் மீது வைத்து அழுத்தி பிடித்தபடி, அவன் தோள் சாய்ந்திட, இங்கே கௌஷிக்கிற்கு மின்சாரம் பாய்ந்திட்டது உடலெங்கும்…
சொல்ல முடியாத சந்தோஷமும், விலக்கிட முடியாத தருணமும் அவனுக்கு நேர்ந்திட, அவன் தன்னிலை இழந்தான்….
சீட்டில் கண் மூடி மெல்ல அவனும் தானாய் சாய்ந்திட, அவனின் தோளில் தஞ்சம் புகுந்திருந்தாள் சாரு… தன் கரத்தினையும் அவன் கைகளுக்குள் வைத்தவாறு…
“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”
{kunena_discuss:1162}