“ஓ நான் ஒருத்தி...எங்களை பத்தி சொல்லாம உன்னை குழப்பிகிட்டிருக்கேன்... என் பேரு மரகதம்.. என்னுடைய தங்கச்சி பையன்தான் நிஷாந்த்.. சொந்தமா தொழில் செய்யறான்.. உன்னை எங்கயோ ஒரு பங்ஷன் ல பார்த்தானாம்.. உடனே உன்னை பிடிச்சிருக்கு பெரிம்மா என்று உங்க வீட்டில வந்து கல்யாணத்துக்கு பேச சொன்னான்... உங்க அம்மாவும் ஜாதகம் பார்த்து எல்லாம் சரியா இருக்குனு சொல்லிட்டாங்க.. எனக்கு ரொம்ப சந்தோஷம்.. அதான் வந்து உன்னை பார்த்துட்டு போய்டலாம்னு வந்தேன்“ என்று முடித்தார் சிரித்து கொண்டே..
“என்ன இது?? சரியான லூசு குடும்பமா இருக்கும் போல.. பொண்ணு பார்க்க பையன் வராம அம்மா வந்திருக்காங்க??” என்று மனதிற்குள் திட்டி கொண்டாள்...
அவளின் என்னம் புரிந்தவராக
“நாங்க ரெண்டு பேரும் தான் வரதா இருந்தது பவித்ரா. அதற்குள் அவனுக்கு வேலை
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் ஆட்டோ பிடித்து போயிடலாம் “ என்று யோசிக்கையில் அங்கு இருந்த செக்யூரிட்டி அவளருகில் வந்து
“என்ன ஆச்சு மேடம்?? “ என்றான்..
“வண்டியில காத்து இல்ல.. ஏதாவது தெரிஞ்ச ஆட்டோ இருந்தால் கூட்டி வர்ரீங்களா?? .. நான் நாளைக்கு வந்து இதை சரி பண்ணிக்கிறேன்” என்றதும் அவன் அவசரமாக அதை மறுத்து