“இங்க எல்லாத்துக்கும் ஆட்கள் இருக்காங்க.. நான் சும்மா மெனு தான் சொல்லிகிட்டிருக்கேன்.. எனக்கே இங்க வந்தா போர் அடிக்கும்.. அதனாலயே இங்க வர்ரது இல்லை”
அதை கேட்டதும் குழப்பமானது பவித்ராவுக்கு
“அப்ப நீங்க இங்க இல்லையா?? “ என்று தன் குழப்பத்தை வெளிப்படையாக கேட்டாள்..
“இல்லைமா... நான் எங்க குடும்பத்தோட கிராமத்துல இருக்கோம்.. ஏதாவது விஷேஷ்ம்னா தான் இங்க பட்டணத்துக்கு வர்ரது..”
“ஆமாம்.. அவன்... “ என்று வாய் வரை வந்ததை நாக்கை கடித்து கொண்டு
“அ... அவரோட அப்பா அம்மா இல்லையா?? “ என்று மெல்ல கேட்டாள்
“ஓ உனக்கு நிஷாந்தை பற்றி தெரியாதா?? நான் அன்னைக்கே பார்வதி கிட்ட எல்லாமே சொல்லியிருந்தேனே...” என்றவர் “ஒன்றை தவிர “ என்று மனதில் சொல்லி கொண்டார்...
அப்பதான் ஞாபகம் வந்தது.. தின
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்த்த பிறகு தான் எனக்கு நிம்மதியானது...
நீ எப்படியும் அவனை மாத்திடுவ.. அதுவும் இல்லாம உன்னை விரும்பி கல்யாணம் பண்ணியிருக்கான். இனிமேல் அந்த மாதிரி தப்பான வழிக்கு போக மாட்டான்
அவனுடைய பழசை எல்லாம் மறந்துட்டு நீ தான் கடைசி வரைக்கும் அவனை பார்த்துக்கனும்” என்று பேசி முடித்தார்...