அதை கேட்டதும் அவனுடைய சிறுவயது இழப்பிற்காக வருந்தியது ஒருமனம்... அதே நேரம் அவனை பற்றி தெரிந்ததும் பவித்ராவிற்கு அதிர்ச்சியாக இருந்தது....
அவனை பற்றி ஓரளவுக்கு ஏற்கனவே தெரிந்தது தான்.. ஆனால் அவனுடைய பெரியம்மாவே அவனை பற்றி தப்பாக சொல்லும் பொழுது..... மனதிற்குள் ஏதோ பயம் முளைத்தது அவளுக்கு.. ஏதோ தப்பாக நடக்க போற மாதிரியே இருக்கே” என்று தோன்றியது.. ஆனாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல்
“நீங்க கவலை படாதிங்க அத்தை.. நான் பார்த்துக்கறேன்” என்றாள்
“இது போதும் பவிமா.. எங்க நான் வாய் தவறி உளறினதை வச்சு நீ எதுவும் தப்பா முடிவு எடுத்துடுவியோணு பயமா இருந்தது...
இது போதும்... நீ எப்படியும் அவனை நல்ல வழிக்கு கொண்டு வந்திடுவ... இதை முன்னாடியே உங்கிட்ட சொல்லி இருந்தால் நீ எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ல உங்களை பார்த்து நிஷா அண்ணா அப்படியே மயங்கிடனும்.. ஏற்கனவே மயக்கத்தில் தான் சுத்தி கிட்டிருக்கார்.. இருந்தாலும் இன்னும் கொஞ்சம் எக்ஷ்ட்ரா மயங்கட்டும் “ என்று சிரித்தாள்...
“ஆனாலும் எப்படிதான் ரெண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி செய்யறீங்களோ” எனவும் பவித்ரா புரியாமல் ஜனனியை பார்த்தாள்...