ஆம். ஷ்யாமை படாத பாடு படுத்தி விட்டாள். முன்னாடி ஒரு கார் சென்றால், “கார் . கார்” என்று பதட்டபட்டாள். சைடில் ஒருவர் ஓவர்டேக் செய்தால் “பார்த்து பார்த்து “ என்று சொன்னாள். சிக்னல் பார்த்தவுடன் “சிக்னல் போட்ருக்கு” என்று கூறினாள்.
அவளின் தவிப்பைப் பார்த்தவன், அடுத்து வந்த ஓர் கிளை சாலையில் வண்டியை நிறுத்தி விட்டு, மித்ராவைப் பார்த்து
“மித்ரா, எதற்கு இத்தனை பயம்.?
“உங்களுக்கு பயமாய் இல்லையா? ரோட்டில் எப்படி வருகிறார்கள்?
“அது சரி. நாம என்ன இந்த நாட்டு பிரதமரா? நான் வரும் சாலை மட்டும் வாகனமே வராம நிறுத்தி வைக்க?
“போங்க அத்தான். நீங்க பக்கத்துலே போய் நிறுத்தறீங்களா? எனக்கு மோதிடுமோன்னு பயமா இருக்கு.
“நீ இதுவரைக்கும் காரில் முன் பக்கம் உட்கார்ந்தது இல்லையா?
“ம்ஹூம். “ என்று தலை ஆட்ட,
“நான் முறைப்படி லைசென்ஸ் வாங்கி கிட்டத்தட்ட பத்து வருடங்களாக கார் ஒட்டுகிறேன். சோ என்னை நம்பி தைர்யமா உட்காரு. சரியா” என்று அவள் கையை பிடித்து அழுத்திக் கொடுத்தான்.
அவனின் அழுத்தத்தில் சற்று தைர்யம் வர, அவனைப் பார்த்து முறுவலித்தாள். இதற்குள் பின்னிருந்து
“அடியே.. மத்து. வர வர உன் கொடுமைக்கு எல்லையே இல்லாம போயிட்டு இருக்கு. ஒஹ் ..கடவுளே. இந்த புள்ளைப் பூச்சிக்கிடேர்ந்து எங்களைக் காப்பத்தேன்?” என்று வேண்ட,
ஷ்யாம் “ஒய்.. பேருக்கும் நக்கலா? பிச்சு.. பிச்சு” என்று கூற, அவர்கள் இருவரும் ஷ்யாமிற்கு அழகு காண்பித்தார்கள்.
அதற்குள் பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோவில் வந்து இருக்க, நால்வரும் இறங்கி கோவிலுக்கு சென்று விட்டு வந்தனர்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
பிறகு சற்று நேரம் பீச்சில் காத்து வாங்கினர். மித்ரா, சைந்தவி, சுமித்ரா மூவரும் அரட்டை அடிக்க, ஷ்யாம் மூன்று பேர் கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்தான்.
அதற்குப்பின் வழியில் ஒரு ஹோட்டல் சென்று இரவு உணவை முடித்துக் கொண்டு சைந்தவியை அவள் வீட்டில் விட்டு விட்டு, இவர்கள் வீட்டிற்கு வரும்போது மணி பதினொன்று ஆகியிருக்க, கண் விழித்து இருந்த மைதிலியை உறங்க அனுப்பிவிட்டு தங்கள் அறைக்குச் சென்றனர்.
முதலில் ரெப்ரெஷ் செய்து , இரவு உடை அணிந்து வந்த மித்ரா, அடுத்த அறைக்கு செல்ல, ஷ்யாம் ரெப்ரெஷ் ஆக சென்றான். அவன் வெளியில் வந்து மித்ராவை தேட, அவள் அந்த அறையில் இல்லை என்று யோசித்தபடி பார்க்க, பக்கத்து அறையில் அவளின் வின்னியை கட்டிக் கொண்டு அங்கிருந்த திவானில் படுத்து இருந்தாள்.
அவளை எழுப்ப எண்ணியவன், அருகில் சென்று பார்க்க, தேவதைக் கதைகளில் வரும் பெண் போலே பாவமாக இருந்தாள். சரி அவளை எழுப்ப வேண்டாம் என்று எண்ணியவன், அவளை மெதுவாக தூக்கிக் கொண்டு தங்கள் அறைக்கு சென்றான். அப்போதும் அவள் ஒரு கையால் வின்னியை இறுக்கிப் பிடிச்சு இருக்க, செய்வதறியாது அவளின் இரு கரங்களையும் தன் தோளில் அணைவாக வைத்த பின், வின்னியை அப்படியே விட்டு விட்டு தங்கள் அறைக்கு சென்றான்.
அவளைப் கட்டிலில் இறக்கி படுக்க வைத்த பின், ஷ்யாமும் அவள் அருகில் படுத்தான். உடனே மித்ரா புரண்டு படுத்து ஷ்யாம் அருகில் படுத்துக் கொண்டாள்.
ஷ்யாமும் அவளை அணைத்தவாறே படுத்தான். ஷ்யாமின் எண்ணங்கள் முழுவதும் “மித்ராவிற்கு இன்டிபெண்டேன்சி வரவைக்க ஏதாவது பண்ண வேண்டும்” என்றே ஓடிக் கொண்டு இருந்தது.
தொடரும்
{kunena_discuss:1187}