என் திட்டம் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நானே நினைத்து பார்க்கலை...
ஆனாலும் உங்க அம்மாவுக்கு தான் நன்றி சொல்லனும்... நான் பணக்காரன் என்று தெரிந்த உடனே எதுவுமே விசாரிக்காமல் உன்னை என் கையில பிடிச்சு கொடுத்திட்டாங்களே ... இவ்வளவு சுலபமா ஒத்துக்குவாங்கனு தெரிந்திருந்தால் கல்யாணம் வரைக்குமே போயிருக்க மாட்டேன்... வேற முறையில உன்னை எங்கிட்ட வர வச்சிருப்பேன் ” என்று அவன் முடிக்கு முன்னே
பாய்ந்து வந்து அவன் சட்டையை எட்டி பிடித்திருந்தாள்...
“டேய்ய்ய்.. போதும் நிறுத்து... இதுக்கு மேல எங்க அம்மாவை பற்றி ஏதாவது பேசின நான் மனுசியா இருக்க மாட்டேன்... நீ இவ்வளவு வசதியானவன் என்று தெரிந்திருந்தால் கண்டிப்பா எங்க அம்மா சம்மதிச்சு இருக்க மாட்ட்டாங்க... ஏதோ உங்க பெரியம்மா நல்லா பழகறாங்கனு தான் எங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் இல்லாமல் புரண்டு புரண்டு படுத்திருந்தாள்..
இங்கு ஆதித்யாவோ கொதித்து கொண்டிருந்தான்... அவள் திமிராக நடந்து ஷோபாவில் சென்று படுக்கவும் அவன் கோபத்துடன் வேகமாக பால்கனிக்கு சென்றான்...பின் குறுக்கும் நெடுக்கமாக நடக்க ஆரம்பித்தான்..