பையன் சரவணன்.. படிப்பு முடிச்சுட்டு எங்க ஊர்லயே விவசாயம் பண்றான்.. அவனோட மனைவிதான் சரோ... அவள் நிறை மாதமா இருந்ததால் கல்யாணத்துக்கு வர முடியலை... நேற்றுதான் குழந்தை பிறந்திருக்கு.. பேரன் ... அவளுக்கு துனையா இருந்ததால் சரவணனும் கல்யாணத்திற்கு வர முடியல...
அது தான். இப்ப போய் பேரனை பார்க்கனும் மா... முதல் பேரன் இல்லையா... அதான் மனசு எல்லாம் அங்கயே இருக்கு...”
“ஹ்ம்ம்ம் வாழ்த்துக்கள் அத்தை.. அப்ப பாட்டி ஆயிட்டீங்க.. “என்று அவரை கிண்டல் செய்தாள் பவித்ரா..
உடனே ஜனனியும் “ ஆமாம். நானும் அத்தை ஆயிட்டேன் அண்ணி” என்று தன் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள்...
“அண்ணி.. நீங்களும் அண்ணாவும் ஒரு நாளைக்கு எங்க ஊருக்கு வரனும். சூப்பரா இருக்கும்..ரொம்ப நாள்... இல்லை வருசமாச்சு நிஷா அண்ணா எங்
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஹ்ம்ம்ம். குடி” என்றான்..
அவன் நீட்டிய பாலை கண்டதும் 2 அடி தள்ளி நின்றாள் பவித்ரா...
அதை பார்த்து மனதிற்குள் சிரித்து கொண்டே..
“ஹே!! நான் என்ன பீரா குடிக்க சொல்றேன்.. இது மில்க்.. ஹ்ம்ம்ம் குடி பேபி.” என்றான்..
“எனக்கு வேண்டாம்... இது பிடிக்காது... “