“ஆனால் ஆதித்யாவிற்கு பிடிக்குமே... எனக்கு பிடிக்கிறது எல்லாம் உனக்கும் பிடிக்கனும்” என்றான் மீண்டும் அதே மிரட்டும் தொனியில்...
“அதெல்லாம் முடியாது... அதுவும் உனக்கு பிடிக்கிறதையா?? உனக்கு பிடிக்கிறது தான் நான் முதல்ல வெறுப்பேனாக்கும்” என்று அவளும் திருப்பி கொடுத்தாள் அவனுக்கு முறைத்தவாறு..
“ஹ்ம்ம்ம் நம்ம கல்ச்சர் படி புருஷன் சொன்னா பொண்டாட்டி கேட்கனுமாம்... நீ தான் நம்ம கல்ச்சர் ல ஊறினவள் ஆச்சே!! அப்ப நான் சொன்னா தட்ட கூடாதாம்...அதனால இப்ப நான் சொல்ற மாதிரி இதை குடிக்கிற...”
“ஹ்ம்ம்ம் அது ஆதர்ஷ தம்பதிகளுக்கு...உன்னை மாதிரி, சவால் ல ஜெயிக்கனும் னு பொய் சொல்லி ஏமாத்தி பேருக்காக கல்யாணம் பண்ணிகிட்டவங்களுக்கு பொருந்தாது.. நீ சொல்றதை எல்லாம் கேட்க நான் ஒன்னும் உன்னோட காதல் மனைவி இல்லை” என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
ேர்மை, நியாயம்னு போர்க்கொடியை தூக்கி கிட்டு நிக்காத. கல்யாணத்திற்கு முன்னாடி எல்லார்கிட்டயும் சரிக்கு சரியா எதற்கும் எதுத்துக்கிட்டு நிற்கற மாதிரி இப்பவும் அதேமாதிரி இருக்காத... எதற்கும் வளைந்து கொடுத்து போகனும்... ” என்று தன் மகளின் குணத்தை அறிந்து, வழக்கமான அறிவுரைகளை கூறி போனை வைத்தார்...