பிரியன் என்னிடம் வேலை பார்க்கிறவன்
நானும் உங்ககிட்ட வேலை பார்க்கிறவள்தான் !
பரத்தின் கோபமான பார்வை முதுகைத் துளைத்தெடுப்பதை அறிந்திருந்தும் திரும்பிப்பாராமல் உத்ரா மிடுக்காக நகர்ந்தாள். ஆனால் சொன்னதைப் போல பிரியன் அவளுடன் எதையும் விவாதிக்க வரவில்லை, அவளாகவே சென்று அழைத்த போதிலும்,
இல்லை உத்ரா எனக்கு வேறு பல வேலைகள் எல்லாம் இருக்கு ராஸ் தீவிற்கு செல்ல அனுமதி வழங்குவதில் சற்று பிரச்சனைகள் இருக்கிறது நான் இப்போ தூதரகம் செல்கிறேன் உங்கள் தொடர்பான வேலைகளுக்கு பரத்திடம் சொல்லியிருக்கிறேன் நாம் ஏற்கனவே பேசிக்கொண்டபடி, இன்று சைட் சீயிங் செல்பவர்களின் விவரம் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பயிற்சி விவரங்கள் எல்லாம் பத்மினியின் மேற்பார்வையில் நடந்து கொண்டு இருக்கிறது. பட்டியலை சரிபார்த்து அவர்களை வழியனுப்பிவிட்டு இங்குள்ள ரேடரில் அவர்களின் விவரங்களை பதிய வைக்க வேண்டியது உங்களின் பணி இன்றிரவு அல்லது அதிகாலை நாம் மூவரும் ராஸ் தீவுக்கு செல்ல வேண்டிவரலாம் அப்போது செல்கிறேன் மீதி விவரங்களை பரத்திடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று உத்ராவின் பதிலை எதிர்பார்க்காமல் விரைவாகவே சென்றுவிட்டான் பிரியன்
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
இத்தனை பெரிய அறையில் மீண்டும் பரத்துடன் தனித்திருக்க வேண்டி வந்துவிட்டதே அதற்கு காரணமான பிரியனின் மேல் கோபம் வந்தது உத்ராவிற்கு. அப்படியும்
பரத் ஸார் நான் பத்மினியை இங்கே அனுப்பிவைக்கட்டுமா ? என்று கேட்டு முடிக்கவும் அவனின் பதிலில் கொஞ்சம் கோபமும் எள்ளலோடு
நீங்கள் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை முதலாளியாகிய நான்தான் முடிவு செய்ய வேண்டும் நீங்கள் அதை முடிவு செய்வது தவறல்லவா ?!
அந்த வார்த்தைகளுக்குப் பிறகு உத்ரா ஏதும் வாதிடவில்லை பிரியன் கிளம்பிப்போனதிற்கும் காரணம் பரத்தாகத்தான் இருக்கும் தன்னை தனித்திருக்க செய்யவே இந்த முடிவு என்பதையும் உணர்ந்து கொண்டு சற்று எச்சரிக்கையாகவே படகுத் துறையில் பத்மினி மற்றும் மற்றவர்களின் செய்கைகளை ஆராய்ந்து கொண்டு இருந்தாள். பரத் புன்சிரிப்புடன் உத்ராவை கவனித்துக் கொண்டு இருந்தான்.
ஒவ்வொருவராக தங்களின் உடைகளுடன் கடலுக்குள் பாய்ந்து கொண்டு இருந்தார்கள் இன்னும் எத்தனை பேர் வந்தாலும் அவர்களை அழகாக என் மடியில் தாங்கிக்கொள்வேன் என்று ஒரு தாய்மையுடன் அலைகரங்களால் வாங்கிக்கொண்டாள். ஒவ்வொரு பேரின் தலைப்பகுதியிலும் விளக்கு வெளிச்சத்தோடு கேமிராக்களும் இணைக்கப்பட்டு இருந்தது அதன் வழியாக ஆழ்கடலின் அழகை ரசித்துக் கொண்டு இருந்தாள் உத்ரா....! அவளை ரசித்துக் கொண்டிருக்கும் கண்களை அறியாமல்....
தொடரும்...
Go to Kathal Ilavarasi story main page
{kunena_discuss:1201}