நாமல்ல இப்போ இதுகளை பத்திரமா பார்த்துகிட வேண்டியிருக்கு. பொம்பள பிள்ளைங்களை தனியா விட்டா வம்பாயுடும் . இவங்க பேரன்ட்சுக்கும், மேனேஜ்மென்டிற்கும் நாமதான் பதில் சொல்லனும் என்று அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர்.
மிதுனன் காலேஜில் தங்கியிருப்பதை தெரிந்து வைத்திருந்த சந்தியா எப்படியாவது அவனை சந்தித்துவிடமாட்டோமா! என்று தவித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அது கோயட் காலேஜாக இருந்தாலும், இரவு உணவிற்குப்பின் பாய்ஸ் தனி பிளாக்கிலும் கேர்ள்ஸ் தனி பிளாக்கிலும் தங்க வைக்கபடிருந்ததன் காரணமாக எல்லோரும் கலந்து நேரத்தை செலவழிக்க இயலவில்லை..
எனவே மற்றவர்கள் அறியாமல் போய் அவனை பார்ப்பதென்பது முடியாத காரியமாகிவிட்டது சந்தியாவிற்கு.
அவனாவது ப்ரோகிராம் ஆர்கனைசிங் காரணத்திற்காக தங்களை தேடிவருவான் என்று பார்த்தாள். அதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் கூடியிருந்த தோழிகள் சினிமா பாட்டு டான்ஸ் என்று தங்களது அந்த பொழுதை கலகப்பாக்கி அனுபவித்தபடி இரவை குதூகளித்துக் கொண்டிருந்தனர்.
தீரமிகுந்தன் வைத்திருந்த யாழிசையின் மொபைலில் அவள் காலேஜ் கிளம்பி பஸ் ஸ்டாண்டில் அவளின் தந்தையுடன் நின்றது முதற்கொண்டு இப்பொழுது அவள் டான்ஸ் ப்ராக்டீஸ் செய்வதுவரை பல போட்டோ கிளிப்புகளுடன் வாட்ஸப்பில் அப்போ.. அப்போ... தகவல்கள் அவனுக்கு வந்துகொண்டிருந்தது.
அவன் அவளின் ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்த்துக்கொண்டே வந்தவனுக்கு காலேஜ் வந்தபிறகு அவளின் போட்டோகிளிப் ஒவ்வொன்றிலும் அவள் இருக்கும் இடத்தில் அவளை ஆர்வமுடன் பார்த்தபடி ஒருவன் இருப்பதை கண்டான் தீரன்.
முதலில் அதனை அவ்வளவாக கண்டுகொள்ளாத தீரன், யாழிசை இருக்கும் எல்லோ போட்டோஸ் மற்றும் வீடியோ கிளிப்புகளில் அவன் இருப்பதோடு மட்டும் இல்லாமல், எல்லாவற்றிலும் அவனின் பார்வை யாழிசையின் மீது காதலாக படிவத்தை கண்டவனுக்கு எரிச்சலாக இருந்தது.
அவன் யாழிசையை பற்றி திரட்டிய தகவலில் அவளின் நட்பு வட்டம் மிகவும் குறுகியதாகவும், வீடுண்டு கல்லூரி உண்டு தனது அய்யா வீட்டு மனிதர்கள் என்று அவள் வட்டம் சிறியதாக இருப்பதாக அவன் நினைத்திருந்தான்.
அவளின் நட்பு வட்டத்தில் கூட ஆண்களில் நெருக்கமானவர்கள் இல்லை என்றே இருந்தது. அப்படியிருக்க இதென்ன புதுசா ஒருவன்...? என்று யோசனையுடன் மிதுனனின் உருவத்தை பெரிதாக்கி பார்த்தான்.
அவன் தன் அளவு அழகனாகவனாக இல்லையென்றாலும் உரமேறியிருந்த அவனின் உடலும், கண்களில் இருந்த கூர்மையும், இவன் சாதாரனமாக ஒதுக்கக் கூடியவன் அல்ல என்ற எச்சரிக்கை மணி தீரனின் மனதினுள் எழுந்தது.
உடனே அவன் அவனை பற்றிய டீடைல்ஸ் திரட்ட ஆட்களை முடிக்கிவிட்ட அரைமணி நேரத்திலேயே அவனுக்கு ரிப்போர்ட் வந்துவிட்டது.
அவ்வாறு கிடைத்த விடை அவனை யோசனையில் ஆழ்த்தியது. மேலும் மினிஸ்டர் ரங்கராஜன் கூறிய மாணவர் படையின் பிரதிநிதி மிதுனன் இவன்தான் என்பது அவனுக்கு தெளிவாக புரிந்தது.
மனதினுள் யாழி பேபி ,உன்னை சுற்றி இருக்கும் உன் நலம் விரும்பிகள் அனைவரும் என் வேளைக்கு எதிரானவர்களாக ஹீரோயிசம் மிகுந்தவர்களாக இருக்கிறார்களே!. உன்னை பற்றி பொதுவாக விசாரித்தால் எளியவளாக தெரிந்தாலும், அப்படியல்ல நீ! .இந்த தீரனின் காதலி எப்படி லேசுபட்டவளாக இருக்கமுடியும் .எனக்கும் உன்னைச் சுற்றியிருக்கும் சவால்களைத் தாண்டி உன்னை அடைவது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் என்று மனதோடு பேசிக்கொண்டான்.
அப்பொழுது இமாமியிடம் இருந்து அழைப்பு வந்தது. அதை அட்டன் செய்த தீரனிடம் பாஸ் நம்ம பிளான் சக்சஸ் நான் கலிபோர்னியா போர்ஸ்டெட் சிட்டியை விட்டு மூவ் ஆகிற நேரம் வந்துவிட்டது .
நம்ம அசட் எல்லாம் கைமாத்திட்டேன். மிஸ் யாழிசை பேரில் அந்த ஐ லேண்ட் பர்சேஸ் செய்திட்டேன். அதற்கான பேமென்ட் அவங்க அக்கவுண்டிற்கு இன்றுகாலை டிரான்பர் ஆகும் என்ற காரணத்தால் பின் தேதியிட்ட காசோலை மிஸ் யாழிசை கொடுப்பதாக ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். டாக்குமென்ட்களில் டூ டேஸ்குள் அவங்க சைன் போட்டுடனும்.
மேலும் நாளை இந்தியன் சேர் மார்கெட்டில் சென்சஸ் புள்ளிகள் அகோரமான உச்சத்தை தொட்டிருக்கும். பெரும்பாலான சேர்ஸ் மிஸ் யாழிசை பேரில் வாங்கபட்டிருப்பதால் அவரை அடையாளம் காண பத்திரிகை உலகம் முன்னிடியடிக்கும். மேலும்,
பிராங்கின் அக்கவுன்ட் பணம் முழுவதுவும் மிஸ் யாழிசை பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதையும் அவர் பிலாங்செக் நெட் பேங்கிங் மூலம் யாழிசைக்கு வழங்கியதாக இருக்கும் டீடைல்சையும் அதனை தொடர்ந்து அவரின் அக்கவுண்டின் முழுத்தொகையும் யாழிசையின் பேரில் கைமாரியிருப்பத்தையும் நாளை பிராங் கண்டுபிடித்து விடுவான். சோ அவனும் மிஸ் யாழிசையை பற்றிய தேடலை தொடங்கி விடுவான். சோ அவர்கள் எல்லோரும் யாழிசையை ரீச் செய்வதற்கு முன்பு நாம் அவங்களை நம் கஸ்டடிக்கு கொண்டுவந்திடனும் என்று கிளம்பும் அவசரத்தில் வேகமாக மூச்சு விடாமல் பேசிமுடித்த இமாமியிடம்.