(Reading time: 8 - 15 minutes)

அந்த உடைக்குள் இருந்தது பரத் என்றும் தங்களை உடனே அந்த இடம் விட்டு நகரச் சொல்லி அவன் சைகை செய்வதையும் உணர்ந்து பரத் இருக்கும் இடம் நோக்கி நீந்தினார்கள்

மீண்டும் நீருக்கடியில் பெரிய நீர்த்திவலைகள் பெண்களிருவரையும் வேகமாக அருகில் இருந்த பாறைகளுக்கு அருகில் இழுத்துச் சென்றார் பரத் மேற்கொண்டு அங்கிருப்பதே மிகவும் ஆபத்து என்பதைப் போல இருந்தது அந்த அசுரவேக நீச்சல் கடல் மட்டத்தின் மேற்புறம் நீந்தி வந்து சற்றே அவர்களின் கப்பல் அருகில் வரும் வரையில் அவர்கள் மூவரும் இடை விடாமல் நீந்தி வந்து கொண்டு இருந்தார்கள்

கரையை அடைந்ததும் தன் நீச்சல் உடையைக் களைந்து விட்டுவேகமாய் வந்து பத்மினி அறைந்தான் பரத்

பரத் என்னயிது முட்டாள்தனமான காரியம் எதற்கு உத்ராவின் எந்த கேள்விக்கும் அவனிடம் பதில் இல்லை மாறாக அவன் உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது வேகமாய் அங்கிருந்து அறைக்குள் நுழைந்து கொண்டான். ப்ரியன் ஓடிவந்தான்

நல்லவேளை உங்களுக்கு ஒன்றும் அசம்பாவிதம் நடக்கவில்லை

என்னாச்சு ப்ரியன் பரத் என்ன அவருக்கு எங்களை அடிமைகள் என்று நினைத்துக் கொண்டாரா பத்மினியை அவர் எப்படி அடிக்கலாம் தவறென்று அவள் என்ன செய்தாள்

நான் சொல்ல சொல்ல கேட்டாகாமல் நீங்க இரண்டு பேரும் நீந்தப் போனீங்க பரத் வந்து நீங்க இரண்டு பேரும் எங்கேன்னுகேட்டாரு விஷயத்தைச் சொன்னதும் அவருக்கு ரொம்பவும்கோபம் வந்திடுச்சு என்னைக் கடிந்துகொண்டு உங்கள் உடைகளோடு கூடிய ரேடார் மூலம் கண்காணிக்கச்சொன்னார் அதற்கான காரணத்தை புரிந்து கொண்டால் நீங்கள் இப்படிகோபப்பட மாட்டீர்கள் உத்ரா ஒருவிநாடி ரேடார் ரூமிற்கு வாருங்கள் என்று கடலில் நடந்த நிகழ்வுகளைபெண்களுக்கு காட்டினான்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

பெண்களிருவரும் நீந்தச்சென்ற சில மணித்துளிகளுக் கு உள்ளாகவே பரத் ப்ரியன் இருக்குமிடம் வந்து சேர்ந்துவிட்டான் நேற்றைக்கு முன்தினம் கடலில் நீர்தன்மைகளை அறியவும் பவளப்பாறைகளின் செயல்பாட்டை அறிந்து கொள்ளவும் மேற்கொள்ளப்பட்ட நீர்மூழ்கிக்கப்பலை கண்காணிக்கவே அவன் நீச்சலை மேற்கொண்டது அப்போது நீர்மூழ்கிக்கப்பலை ஏதோ ஒரு விலங்கு மிக மோசமாக தாக்கியிருப்பதையும் அநேகமாக அது ஒருதிமிங்கலமாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்பதோடு இலேசாய் சிதிலமடைந்த அந்த நீர்மூழ்க்கிக் கப்பலில் பெரிய பற்களும் பதிந்திருந்தது சிரமப்பட்டு அதை கப்பலில் இருந்து பிரித்து எடுத்து வந்து காண்பித்தார் என்று ப்ரியன் இரண்டு பெரியபாதி உடைந்திருந்த பற்களைக் காண்பித்தான்

எனக்கு தெரிந்து இந்த மீனின் எடை 8 டன்னிற்குமேல் இருக்கலாம் ஆனால் இந்த பகுதியில் இம்மாதிரி மீன்கள் கிடையாது இது எப்படி இங்கே வந்திருக்கலாம் என்பதும்தெரியவில்லை, நீங்கள் இருவரும் நீந்த சென்றிருந்தபோது உங்களுக்கு வெகு அருகாமையில் தான் அந்த மீன் இருந்திருக்கிறது ரோடார் கருவி மூலம் ஏதோ ஒரு வித்தியாசமான சப்தத்தை நாங்கள் இருவரும் கவனித்தோம் அப்போதுதான் அந்த மீன் மீண்டும் நீர்மூழ்க்கிக் கப்பலைநோக்கி வந்திருந்தது

பரத்தும் உங்களை விசாரித்ததும் அப்போதுதான் அந்த மீனினால் உங்களுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று உடனேயே கிளம்பியும் விட்டார்

அதற்கு எதற்கு பத்மினியை அடிக்க வேண்டும்

கடலின் தன்மையும் அதன் ஆபத்தும் தெரியும்போது எதற்காக இருவரையும் தனியே அனுப்பினாய் என்று என்னைக் கடிந்து கொண்டபோது பத்மினி தான் ஆர்வமாய் கிளம்பியதாகவும் அவளே உத்ராவையும் அழைத்துச் சென்றதையும் நான் எச்சரித்ததையும் சொன்னேன் நல்லவேளையாக அவரே உங்களை அழைத்தும் வந்து விட்டார் சற்றுமுன் அந்த மீன் மீண்டும் நீர் மூழ்கிக் கப்பலின் மேல் தாக்குதல் நடத்தியிருக்கிறதைப் பாருங்கள் என்று திரையை ஒளிப்பரப்பினான் ப்ரியன்

ஆக்ரோஷத்துடன் கப்பலை தன் எதிரியாய் நினைத்து மோதிக்கொண்டிருந்தது அந்த ராட்சத மீன்.

தொடரும்...

Episode # 12

Episode # 14

Go to Kathal Ilavarasi story main page

{kunena_discuss:1201}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.