அறைக்குள் நுழைந்த அவனது முகத்தில் இன்னும் கோபம் கனன்றது.
எத்தனை தைரியம் இருந்தால் என்னை வேண்டாமென்று சொல்லியிருப்பாள்.
எது என்னை வேண்டாம் என்று சொல்ல வைத்தது.
நல்ல கலராக இருக்கிறாளே. அதுதான் கருப்பாக இருக்கும் என்னை அவளுக்குப் பிடிக்கவில்லையா?
அத்துடன் நான் வெறும் டிப்ளமோதான் படித்திருக்கிறேன். அவளோ எம்.எஸ்ஸி படித்திருக்கிறாள். படிப்பு தந்த கர்வம் போலும்.
திமிர் பிடித்தவள்.
மனதிற்குள் திட்டிக்கொண்டவனுக்கு அவளை முதன் முதலில் பார்த்த நினைவு வந்தது.
கருப்பையாவுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், ஒரு தங்கை. அவர்கள் நால்வருமே குடும்பத்துக்கலருடன் பிறந்திருந்தனர். கருப்புதான் அந்தக் கலர்.
அவனது தங்கை கவிதாவுக்கு மணமுடிப்பதற்குள் மிகப்பெரிய கவலை அவர்களுக்கு.
...
This story is now available on Chillzee KiMo.
...
னக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்குன்னு தெரிஞ்ச பிறகும் எப்படி சும்மா இருக்கிறது? அதான் பொண்ணைப் பத்தி விசாரிச்சு உங்க அப்பாக்கிட்ட சொன்னேன். அவரும் தரகரை வரச்சொல்லி விவரத்தை அவர் காதில் போட்டுவிட்டார். அவங்களுக்கும் உன்னைப் பற்றி விசாரித்ததில் பிடித்து பொண் போட்டோவை கொடுத்து அனுப்பியிருக்காங்க.”